46 வயதில் அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய சிம்பு பட நடிகை...!
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை மந்திரா பேடி. இவர் நடிக்க வருவதற்கு முன் தன்னுடைய 20 வயதிலேயே, இந்தியாவின் தேசிய அலைவரிசையான தூர்தர்ஷன்னில் ஒளிபரப்பப்பட்ட 'சாந்தி' என்ற தொலைக்காட்சி தொடரில் நாயகியாக நடித்து பிரபலமானார்.
"சாந்தி" தொலைக்காட்சி தொடர் மூலம் அவர் நட்சத்திரமாக மாறிய பிறகு 1995 ஆம் ஆண்டு திரைப்படம் 'டில்வாலே துல்கர்னியா லே ஜெயங்கே' யில் ஒரு துணைப்பாத்திரத்தில் தோன்றினார். மேலும் பிரபலமான இந்திய நாடகமான கியோன்கி சாஸ் பி கபி பாஹ் தி இல் "மோனா" என்றழைக்கப்பட்ட "மந்திரா" முக்கிய வில்லி பாத்திரம் ஏற்று நடித்தார்.
இவர் பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரான ராஜ் கவுஷல்லை மந்திரா பேடி திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து பாலிவுட் மற்றும் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு, நடித்த 'மன்மதன்' திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியான மருத்துவராக நடித்திருந்தார்.
மேலும் தற்போது பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்து மூன்று ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகி வரும் 'சாஹோ' படத்தில் நடித்து வருகிறார்.
45 வயதை கடந்தும் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கும் இவர் தற்போது, மிகவும் கவர்சியாக அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
தற்போது விரலாக பரவி வரும் புகைப்படம் இதோ...