manisha koirala open talk her divorce
நடிகை மனிஷா கொய்ராலா பாலிவுட் மற்றும் இன்றி கோலிவுட்டிலும் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்தவர்.
திரைத்துறையில், முன்னணி கதாநாயகியாக இருக்கும்போதே நேபாள தொழிலதிபர் சாம்ராட் என்பவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.
ஆனால் இவர்களுடைய திருமண பந்தம் முழுமையாக இரண்டு வருடம் கூட நீடிக்க வில்லை, 2012 ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இது வரை ஏன் விவாகரத்து பெற்று பிரிந்தேன் என வெளியில் கூறாமல் இருந்த இவர் முதல் முறையாக தன்னுடைய விவகாரத்துக்கான காரணத்தை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், என்னுடைய திருமண பந்தம் எப்படி இருக்கவேண்டும் என நான் கனவு கண்டேனோ அது போல் இல்லை. இதனால் ஒரு நிலையில் பிரிந்து விட முடிவெடுத்தேன். இதுவரை என் திருமண வழக்கை தோல்வியடைந்ததால் ஒரு முறை கூட நான் கவலைப்பட்டது இல்லை என தெரிவித்தார்.
மேலும் நான் கேன்சர் நோயால் அவதி பட்டபோது என்னோடு நெருக்கமாக இருந்த நண்பர்கள் மற்றும் சொந்தங்களும் என்னை விட்டு விலகினார்கள் ஒரு வேளை நான் அவதி படுவதை பார்க்க அவர்களுக்கு மனம் இல்லை என நினைக்கிறேன்.
எது எப்படி இருந்தாலும் என் வாழ்வில் நடத்த அனைத்து நல்லது மற்றும் கெட்டதற்கு நானே பொறுப்பேற்கிறேன் என கண்கலங்கியவாறு தெரிவித்தார்.
