Asianet News TamilAsianet News Tamil

விஜய் சேதுபதியின் வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் மணிரத்னம்...

தனது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை டிசம்பர் மாதத்தில் துவங்க முடிவு செய்துள்ள மணிரத்னம் விஜய் சேதுபதியின் பதிலுக்காக மிக ஆர்வமாகக் காத்திருப்பதாகத் தெரிகிறது. கைவசம் 6 படங்களுக்கும் மேல் உள்ளதால் தனது பதிலைச் சொல்லாமல் இழுத்தடித்து வருகிறாராம் விஜய் சேதுபதி.
 

manirathnam waiting for vijay sethupathi
Author
Chennai, First Published Jul 28, 2019, 5:58 PM IST

தனது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை டிசம்பர் மாதத்தில் துவங்க முடிவு செய்துள்ள மணிரத்னம் விஜய் சேதுபதியின் பதிலுக்காக மிக ஆர்வமாகக் காத்திருப்பதாகத் தெரிகிறது. கைவசம் 6 படங்களுக்கும் மேல் உள்ளதால் தனது பதிலைச் சொல்லாமல் இழுத்தடித்து வருகிறாராம் விஜய் சேதுபதி.manirathnam waiting for vijay sethupathi

மிக விரைவில் துவங்கவிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’படத்தில் இதுவரை இந்திய சினிமா காணாத அளவுக்கு ஒரு பெரும் நட்சத்திரப்பட்டாளத்தை இயக்குநர் மணிரத்னம் திரட்டிக்கொண்டிருக்கிறார். தற்போதைய நிலவரப்படி இப்படத்தில்  கார்த்தி [வந்தியத்தேவன்], நயன் தாரா [நந்தினி] அனிஷ்கா [குந்தவை] ராஷி கன்னா [வானதி] ரகுல் ப்ரீத் சிங் [பூங்குழலி] அதர்வா [ராஜராஜன்] விக்ரம் [ஆதித்ய கரிகாலன்] சரத்குமார் [சுந்தர சோழன்] ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள். இதுபோக ஜெயம் ரவி, நாசர் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.

இந்நிலையில் படத்தின் இன்னொரு முக்கிய பாத்திரமான பெரிய பழுவேட்டரையராக நேற்று இயக்குநர் பார்த்திபன் தேர்வாகியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,...படத்தைப் பார்த்தாலே பொருள் விளங்கும்,திரு மணிரத்னம் படைப்பில்-என் பங்களிப்பில்-பெருங்களிப்பில் 'பொன்னியின் செல்வன்'.அப்படத்திற்காக Spelling மட்டுமே கற்றிருந்த நான் Swimming கற்கிறேன்!... என்று பதிவிட்டிருக்கிறார்.manirathnam waiting for vijay sethupathi

இப்படி நாளுக்கு நாள் நட்சத்திரங்கள் அதிகரித்துக்கொண்டிருந்தாலும் விஜய் சேதுபதியின் வருகையை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாராம். தன் கைவசம் இருக்கும் படங்களின் கால்ஷீட் பிரச்சினைகளை சரி செய்துகொள்ள மேலும் இருவார கால அவகாசம் கேட்டுள்ள விஜய் சேதுபதி பொன்னியில் செல்வனில் கலந்துகொள்ள சாத்தியங்கள் குறைவு என்றே தெரிகிறது. இந்தியாவில் அதிக நட்சத்திரங்கள் இணையும் பிரமாண்ட படமாக உருவாக உள்ளது பொன்னியின் செல்வன். சில வருடங்களுக்கு முன்பு, இப்படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. தற்பொழுது இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios