’சுர்ஜித்துக்காக பதறித்துடிக்கும் வேளையில் பட விளம்பரம் வெளியிட்டதற்காக மன்னியுங்கள்’...பிரபல இயக்குநர்...
இது குறித்து நேற்று இரவு அவர் வெளியிட்ட முகநூல் பதிவில்,...அன்பு முகநூல் நண்பர்களுக்கு.,
கடந்த இரண்டு தினங்களாக எனது "கொம்புவச்சசிங்கம்டா” திரைப்படத்தின் விரைவில் டிரைலர் எனும் paper ad desings செய்தி தாள்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்டிருந்தோம்.,அதற்கு வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் நன்றிகள் பல.,
நான்கு தினங்களாகியும் ஆழ்துளைக் கிணற்றுக்குள்ளிருந்து பச்சிளம் பாலகன் மீட்கப்படாத நிலையில், அந்தத் த்ய்ரத்தில் பங்கேற்காமல் தங்கள் பட விளம்பரங்களை வெளியிட்டதற்காக பிரபல இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் தனது முகநூல் பக்கத்தில் வருந்தி மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இது குறித்து நேற்று இரவு அவர் வெளியிட்ட முகநூல் பதிவில்,...அன்பு முகநூல் நண்பர்களுக்கு.,
கடந்த இரண்டு தினங்களாக எனது "கொம்புவச்சசிங்கம்டா” திரைப்படத்தின் விரைவில் டிரைலர் எனும் paper ad desings செய்தி தாள்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்டிருந்தோம்.,அதற்கு வாழ்த்து கூறிய அனைத்து நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் நன்றிகள் பல.,
அதே வேளையில் கடந்த இரண்டு தினங்களாக மணப்பாறை அருகேயுள்ள நடுகாட்டுபட்டியில்ஆழ்துளையில் விழுந்துவிட்ட சிறுவன் சுர்ஜித்திற்காக அனைவரும் பதறி துடிக்கும் இந்த வேளையில் இந்த AD வேண்டாம் என நாங்கள் முடிவு செய்து அதை STOP செய்ய கூறினோம்., ஆனால் எங்களால் முதல் மூன்று நாள் கொடுத்த ADடை STOP செய்ய முடியவில்லை., எனவே இந்த நேரத்தில் எங்களின் விளம்பரம் வந்ததிற்கு வருந்துகிறோம். வரும் செவ்வாய்கிழமை முதல் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ பட விளம்பரங்களை நிறுத்திவிட்டோம்.தவறு இருப்பின் மன்னிக்கவும்.
என்றும் அன்புடன்
எஸ்.ஆர். பிரபாகரன்
திரைப்பட இயக்குனர்.#Savesurjith என்று பதிவிட்டுள்ளார். அவரது செயலைப் பாராட்டும் ரசிகர்கள் சமூகப்பொறுப்புடன் செயல்பட்டதற்காக அவரைப் பாராட்டி வருகின்றனர்.