'நடிகையர் திலகம்' படத்தின் மூலம் தேசிய விருது வென்ற நடிகையாக உச்சம் தொட்டுள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது, ஹிந்தியில் அறிமுகமாகும் படம் மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் தலா ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார். 

இதில், தமிழில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் அவர் நடிக்கும் படம் 'பெண்குயின்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சத்துடன் உருவாகும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய அனில் கிரிஷ் எடிட்டிங்கை கவனிக்கிறார். 

'பெண்குயின்' படக்குழுவினரின் இந்த அசுரவேக உழைப்பை பார்த்து வியந்து போன நடிகை கீர்த்தி சுரேஷ், அவர்களை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "நான் பணியாற்றிய படக்குழுவினர்களில் இந்த படத்தின் குழுவினர்கள் மிகவும் சிறந்தவர்கள் - இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே பல இனிமையான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டது - இந்த படத்தை திரையில் காண மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன்" என பாராட்டியுள்ளார். 

'பெண்குயின்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, இன்னும் ஒரு சில தினங்களில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கும் என தெரிகிறது. விரைவில், படத்தின் டீசர், இசை மற்றும் ரிலீஸ் தொடர்பான அறிவிப்புகளை படக்குழுவிடமிருந்து எதிர்பார்க்கலாம்.