கடனை அடைக்காமல் களவாணி 2 வெளி வரக்கூடாது... நீதிமன்றம் இடைக்கால தடை...!
விமல் நடித்த களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விமல் நடித்த களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சற்குணம் இயக்கி தயாரித்துள்ள படம் களவாணி 2. இப்படத்தில் நடிகர் விமல் மற்றும் ஓவியா நடித்துள்ளார். களவாணி படம் வெற்றி வெற்றதையடுத்து களவாணி 2 ஜூலை 5-ம் இன்று வெளியாக இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக உள்ள ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் களவாணி திரைப்படத்தின் இயக்குநர் சற்குணம் தன்னிடம் 67 லட்சம் வாங்கியதாகவும், இத்தொகைக்கு 20 சதவீத வட்டியும், லாபத்தில் 20 சதவீத பங்கும் வழங்குவதாக ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் சற்குணம் கையெழுத்திட்டார். ஒப்பந்தப்படி திரைப்படம் ளெியாவதற்கு ஒரு வாரம் முன்பு பணத்தை அவர் திருப்பித் தரவேண்டும். ஆனால், பணத்தை திரும்பி தராமல் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். எனவே பணத்தை திருப்பித் தரும்வரை படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி களவாணி 2 படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.