ஐயோ... அந்த 5 நொடியை காணும்... அழுது புலம்பும் ஜூலி
திரைப்படத்தில் காமெடி நடிகர் எப்படி இல்லாத கிணற்றை காணும் என்று அனைவரிடமும் கூறி அழுது புலம்புவாரோ, தற்போது அதே நிலைதான் ஏற்பட்டுள்ளது ஜூலிக்கு.
ஓவியா சொல்லாத வார்த்தையை சொன்னார் என்று கூறி அனைவரிடமும் அசிங்கப்பட்டு நின்றும், தான் கூறியது பொய் இல்லை ஓவியா 5 நொடிக்கு முன் "அது கேட்டுச்சா" என கூறினார் என சாதித்து பேசினார்.
இவர் சொல்வது பொய் என்று தெரிந்தும், தெரியாமல் பொய் பேசிவிட்டார் மன்னித்து விடுவோம் என்கிற மனநிலையில் இருந்தாலும் திருந்தாத புளுகு மூட்டை ஜூலி தான் சொல்லுவது தான் உண்மை என்பது போல அனைவரிடத்திலும் சீன் போட்டு அசிங்கப்பட்டு தான் போனது.