ஜோதிகா நடிப்பது ரீமேக்கா.......??? தலைப்பால் எழுந்த சர்ச்சை.......!!!
ஜோதிகா நடிப்பது ரீமேக்கா.......??? தலைப்பால் எழுந்த சர்ச்சை.......!!!
ஜோதிகா என்ற நாயகியை எப்போதும் மறக்கவே முடியாது . அந்தளவுக்கு தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பவர். கே
கடந்த ஆண்டு இவர் நடித்த 36 வயதினிலே படம் பெண்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது, திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்திருந்தார் ஹிட் படத்தை கொடுத்த நாயகி என்கிற பெயரையும் பெற்றார்.
இந்நிலையில் இவர் பிரம்மா இயக்கத்தில் மகளிர் மட்டும் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் வந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா, ஊர்வசி போன்ற நாயகிகளும் நடித்து வருவது குறிப்பிடதக்கது.
அண்மையில் தான் படத்தின் போஸ்டரும் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் மகளிர் மட்டும் என்ற தலைப்பை கொடுத்ததற்காக நடிகர் சூர்யா கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
1994ல் மகளிர் மட்டும் என்ற பெயரில் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் ஒரு படம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஊர்வசி, ரேவதி, ரோகிணி என மூன்று நாயகிகள் நடித்தனர்.
இதே போல் இந்த படத்திலும் நாயகிகள் பலர் இருபலத்தால் அந்த படத்தைதான் இந்த காலத்திற்கு ஏற்ற போல் ரீமேக் செய்கிறார்களா என பலர் மனதில் கேள்வி எழுந்துள்ளது. இந்த சர்ச்சைக்கு பட குழு தான் பதில் சொல்ல வேண்டும்.