Jai wrote love letter to anajali

நடிகர் ஜெய் மற்றும் நடிகை அஞ்சலியும் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்ததிலிருந்து இருவரும் காதலில் விழுந்துள்ளனர் என்று திரையுலக வட்டாரமே கிசு கிசுத்தது இந்நிலையில் இருவரும் இதை மறுத்து வந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது அஞ்சலி இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார் அதற்கு ஜெய் தன் சமூக வலைப்பக்கத்தில் அஞ்சலிக்கு வாழ்த்து செய்தி சொல்லி இருக்கிறார். "நீ நீயாக இருந்து என் ஒவ்வொரு நாளையும் ஸ்பெஷலாக்குகிறாய்" என்று அஞ்சலிக்கு ரொமான்ஸ் லெட்டர் எழுதிஇருக்கிறார் . ஜெய்...

எனக்கு நீ எப்படி ஸ்பஷெலோ அதே போன்று இந்த நாள் உனக்கும் ஸ்பஷெலாக அமையட்டும். நீ நீயாக இருந்து என் ஒவ்வொரு நாளையும் ஸ்பெஷலாக்குகிறாய் என்பதை உனக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

நானும், கடவுளும் என்றுமே உன்னுடன் இருப்போம். ஹேப்பி பர்த்டே அஞ்சு என்று ட்வீட்டியுள்ளார் ஜெய்.

ஜெய்யின் ட்வீட்டை பார்த்த அஞ்சலி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். என்னுடன் இருப்பதற்கு நன்றி ஜெ., என் ஸ்பெஷல் நாளில் இந்த ஸ்பெஷல் வாழ்த்துக்கு நன்றி என்று ட்வீட்டியுள்ளார்.