தனுஷுடன் நடிக்க மறுத்தது ஏன்.....??? மனம் திறந்த ஐஸ்வர்யா ராய்....!!!
தனுஷ் தற்போது கோலிவுட் தாண்டி பாலிவுட்டிலும் கலக்கி வருகின்றார் மேலும் இயக்கம், பாடல், தயாரிப்பு என பல துறைகளிலும் பிரகாசித்து வருவது அனைவரும் அறிந்தது தான்.
இவர் அடுத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஐபி-2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் யாராவது பாலிவுட் பிரபல நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணினாராம் சௌந்தர்யா ,அது கிட்டத்தட்ட படையப்பா நீலாம்பரி போன்று நெகட்டிவ் கதாபாத்திரம் .
முதலில் இதற்கு ஐஸ்வர்யா ராயை தான் தனுஷ் மற்றும் சௌந்தர்யா அணுகியுள்ளார், அதற்கு அவர் முழுக்கதையும் கேட்ட பிறகு, வில்லியாக நடிக்க உடன்பாடில்லை என கூறிவிட்டாராம்.
இதன் பிறகே இந்த கதாபாத்திரம் கஜோலுக்கு வந்துள்ளது குறிப்பிடதக்கது.