அயலான் படத்தை தொடர்ந்து, தன்னுடைய வெற்றி படமான 'இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகத்தை ரவிக்குமார் இயக்க உள்ள நிலையில், இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் பேனரில் சி வி குமார் தயாரிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்த 'இன்று நேற்று நாளை' அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற திரைப்படம் ஆகும். இதன் இயக்குநர் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அயலான்' படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் ஒன்பது வருடங்களுக்கு பிறகு 'இன்று நேற்று நாளை' இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இன்று நேற்று நாளை 2' என்று பெயரிடப்பட்டுள்ளது.
Pizza 4: 'பீட்சா 4' படத்தில் ஹீரோவான நாசர் மகன் அபி ஹாசன்... ஹீரோயின் இந்த பிக்பாஸ் பிரபலமா?
ரவிக்குமார் எழுத்தில் உருவாகும் இந்த புத்தம் புதிய, சுவாரசிய காலப்பயணத் திரைப்படத்தை பரத் மோகன் இயக்குகிறார். சி வி குமாரிடம் 'மாயவன்' திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய இவர், 'இக்லூ' மற்றும் 'இப்படிக்கு காதல்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
'கஜினிகாந்த்', 'இப்படிக்கு காதல்', 'பொய்க்கால் குதிரை' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பல்லு 'இன்று நேற்று நாளை 2' படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பரத் மோகன், "ஒரு புதிய கதைக்கருவோடு 2015ல் வெளியான 'இன்று நேற்று நாளை' மக்களை கவர்ந்து பெரிதும் பேசப்பட்டது. அதன் இரண்டாம் பாகத்தை, அதுவும் அத்திரைப்படத்தை தயாரித்த சி வி குமார் அவர்கள் தயாரிப்பிலும், இயக்குநர் ரவிக்குமார் எழுத்திலும் இயக்குவது பெரும் மகிழ்ச்சி. காலப்பயண கதையான 'இன்று நேற்று நாளை 2' திரைப்படமும் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடிக்கும்," என்று கூறினார். தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் தயாரிப்பில் இயக்குநர் ரவிக்குமார் எழுத்தில் பரத் மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'இன்று நேற்று நாளை 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.
