Asianet News TamilAsianet News Tamil

இளையராஜா 75 விழா !! 'தென்றல் வந்து' பாடலை இசைஞானி பாட … ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர்டு வாசிக்க…. ரசிகர்கள் உற்சாகம் !!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்து சாதனை புரிந்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று பாராட்டு விழாவில் தென்றல் வந்து தீண்டும்போது என்ற பாடலை இளையராஜா பாட அதற்கு ஏ.ஆர்.ரகுமான் கீ போர்டு வாசித்து அசத்தினர். இரு இசை மேதைகளின் சங்கமம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
 

Ilayaraja 75  function a.r.rahman
Author
Chennai, First Published Feb 3, 2019, 9:09 AM IST

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்து சாதனை புரிந்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கிவைத்தார்.

Ilayaraja 75  function a.r.rahman

இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்தும் அவர் வழங்கினார். இளையராஜாவின் சாதனைகள் பற்றிய புத்தகத்தையும் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார்.

Ilayaraja 75  function a.r.rahman

விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது , , இளையராஜா எனக்கு தலைமை ஆசிரியர் மாதிரி. அவரிடம் நான் ஒழுக்கம் கற்றுக்கொண்டேன். தனது வாழ்க்கையை தவம் மாதிரி அமைத்துக்கொண்டார். எப்படி வாழ வேண்டும் என்பதை அவரிடம்தான் கற்றேன். 

Ilayaraja 75  function a.r.rahman

மேதைகள் மற்றவர்களை அவ்வளவு சீக்கிரம் பாராட்ட மாட்டார்கள். ஆனால் இளையராஜாவிடம் நான் பாராட்டையும், ஆசிர்வாதத்தையும் வாங்கி இருக்கிறேன். எனது இசைக்கு அடித்தளம் இளையராஜாதான் என்றார்.

Ilayaraja 75  function a.r.rahman

இதைத் தொடர்ந்து இளையராஜா, தென்றல் வந்து தீண்டும் போது எனற பாடலை பாடினார். அதற்கு ஏ.ஆர்.ரகுமான் கீ போர்டு வாசித்து அசத்தினார். இந்த நிகழ்வு அங்கிருந்த ரசிகர்களை உறசாகப்படுத்தியது.

Follow Us:
Download App:
  • android
  • ios