இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் போட்டி போட்டு ஒரு படம் எடுக்க வேண்டும், அதன் மூலம் அவரிடம் பாராட்டு பெற வேண்டும் என்பதுதான் என் ஆசை என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் போட்டி போட்டு ஒரு படம் எடுக்க வேண்டும், அதன் மூலம் அவரிடம் பாராட்டு பெற வேண்டும் என்பதுதான் என் ஆசை என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேச்சு அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இருந்தது.

பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றவர்கள் வந்தபிறகுதான் தமிழ் திரையுலகம் தமிழகத்தின் அப்பட்ட கிராமங்கள் திரைக்கு வந்தது, அதில் மிக முக்கியமானவர் பாரதிராஜா, அவரின் எல்லா படங்களும் மண் வாசம் மிக்கது. தமிழக கடைக்கோடி கிராமங்களையும் வெள்ளந்தி மனிதர்களின் திரையில் கொண்டாடியவர் அவர், கடந்த 45 ஆண்டுகளாக சினிமா உலகில் இயக்குனர் இமயமாக கோலோச்சும் பாரதிராஜாவுக்கு தமிழ் திரைப்பட செய்தியாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்: சுஷாந்த் சிங்கை போல் மர்ம மரணம்... இறந்த நிலையில் இளம் நடிகர் பிணமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு

இந்நிகழ்ச்சியில் புதுமுக இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்டு பாரதிராஜா உரையாற்றினார் அப்போது பேசிய அவர், சமீபகாலமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது, அதனால் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மனதும் உடலும் சம்மதிக்கவில்லை, ஆனாலும் பத்திரிகையாளர்கள் மீதான அன்பினால் இதில் கலந்துகொண்டேன். நான் டெல்லி வரை பல மேடைகளை பார்த்துள்ளேன், ஆனால் பத்திரிக்கையாளர்கள் நடத்தும் நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது.

இதையும் படியுங்கள்: எனக்கு ஏதாச்சும் ஆச்சுனா அதுக்கு அவர் தான் பொறுப்பு - ரஜினி பட வில்லன் மீது விஷால் பட நடிகை பரபரப்பு புகார்

ஒருமுறை ஒரு பத்திரிக்கை என்னை குறைத்து மதிப்பிட்டு எழுதியபோது அந்த பத்திரிக்கையின் ஆசிரியரை நேரில் போய் சந்தித்து திட்டி விட்டு வந்தேன், இப்போது நான்காவது தலைமுறை ஊடகத்தை பார்க்கிறேன், இப்போது ஊடகச் சூழல் என்பது மிக நட்பாக மாறியுள்ளது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்து பேசி ஆகவேண்டும், சின்ன பையன் தான் ஆனால் சாதனையில் பெரிய பையன். சினிமாவை நேசித்து பெரிய கனவுடன் வந்துள்ளார், எனக்கு லோகேஷ் கனகராஜ் மிகவும் பிடித்துவிட்டது, நடிகர் கமல் சிறந்த நடிகர் சினிமாவுக்காகவே தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். 

கமல் மற்றும் ரஜினியை ஒன்றாக சேர்த்து விழா நடத்த வேண்டும் என ஆசையாக உள்ளது. 16 வயது படப்பிடிப்பின்போது நானும் ரஜினியும் ஓட்டல் வராண்டாவில் படுத்து கிடந்தோம், அந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கக்கூடிய நடிகர் ரஜினி, நான் சினிமாவில் பல அவதாரங்கள் எடுத்து இருக்கிறேன், சப்பானி ஆகவும் இருந்திருக்கிறேன், ஸ்ரீதேவி ஆகவும் இருந்திருக்கிறேன். இப்போது இரண்டு படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறேன். நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இயக்குனர் லோகேஷ் என்னை பாராட்டும் அளவிற்கு அவருடன் போட்டு போட்டு நான் ஒரு படம் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.