ரசிகர்களுக்கு ஜிவி பிரகாஷ் தரவிருக்கும் டபுள் ட்ரீட்! 'ஆயிரம் ஜென்மங்கள்' படக்குழுவின் அடுத்த சர்ப்ரைஸ் அறிவிப்பு!
'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஜிவி பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் 'ஆயிரம் ஜென்மங்கள்'. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் எழில் இயக்கியுள்ளார்.
முதல்முறையாக எழில் - ஜிவி பிரகாஷ் கூட்டணி சேர்ந்திருக்கும் 'ஆயிரம் ஜென்மங்கள்' ஹாரர் ஃபேண்டஸி படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஈஷா ரெப்பா, நிகிஷா பட்டேல் என டபுள் ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
இதில், முக்கிய கேரக்டரில் சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்துக்கு, சி.சத்யா இசையமைத்துள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'ஆயிரம் ஜென்மங்கள்' படம், வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீசாகும் என சில தினங்களுக்கும் முன்பு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, படத்தை விளம்பரப்படும் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கெனவே, இந்தப் படத்தின் இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இசை வெளியீடு குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு உற்சாகத்தை தரும் வகையில், 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தின் இசை நாளை (நவ. 27) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், நாளை (நவ. 27) நண்பகல் 12 மணிக்கு "அருப்புக் கோட்டையிலே" என்ற வீடியோ பாடலும் வெளியிடப்படும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.
ஆயிரம் ஜென்மங்கள்' படத்துக்காக ஜிவி பிரகாஷ் அளிக்கும் இந்த டபுள் ட்ரீட், ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.