சாண்டியை கேள்வி கேட்டு கமலிடம் சிக்க வைத்த போன் காலர்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும், போன் மூலம் ரசிகர்கள் உள்ளே உள்ள ஹவுஸ் மேட்ஸ்சுடன் பேசி வருகிறார்கள் என்பது நாம் அறிந்தது தான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும், போன் மூலம் ரசிகர்கள் உள்ளே உள்ள ஹவுஸ் மேட்ஸ்சுடன் பேசி வருகிறார்கள் என்பது நாம் அறிந்தது தான்.
அதே போல் இந்த வாரம், சாண்டியிடம் ஒரு போன் காலர் பேசுவது, தற்போது முதல் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
"எல்லாரையும் சிரிக்க வைக்குற சாண்டி, சண்டைனு வந்துட்டா ஏன் நியாயத்துக்கு குரல் கொடுக்காம விலகியே இருக்கீங்க என கேட்கிறார். இதற்கு சிரித்தவாரே சாண்டி, இனிமேல் கண்டிப்பாக குரல் கொடுக்கிறேன் என கூறுகிறார். இவர் சொன்ன பதிலை மடக்கி, இனிமேல் கேட்க வில்லை, இதற்கு முன் ஏன் குரல் கொடுக்கவில்லை என கேள்வி கேட்டு சாண்டியை சிக்க வைக்கிறார் கமல்.
இதற்கு சாண்டி, எப்படி உள்ளே நுழைவது என்றே தெரியவில்லை ஒரே குழப்பமாக இருக்கிறது என கூறுகிறார். இவரின் இந்த பதிலை கேட்டு அரங்கமே கைதட்டுகிறது.
#Day35 #Promo1 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/8BejNyuxc6
— Vijay Television (@vijaytelevision) July 28, 2019