'எனிமி' ரிலீஸ் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!
'அவன் இவன்' படத்திற்கு பின், ஆர்யா - விஷால் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள, 'எனிமி' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
'அவன் இவன்' படத்திற்கு பின், ஆர்யா - விஷால் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள, 'எனிமி' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, ஆர்யாவின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் பெரிதாக பாராட்டப்பட்டது. இதனையடுத்து ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் அரண்மனை 3, எனிமி ஆகிய படங்களின் அப்டேட்டுக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவது அனைவரும் அறிந்தது தான்.
இந்நிலையில் தன்னுடைய உயிர் நண்பரான விஷாலுடன் ஆர்யா இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'எனிமி'. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். நடிகை மிருணாளினி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வினோத் தயாரிக்கிறார். மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் பலர் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய பட்ஜெட், விஷால் - ஆர்யா மீண்டும் ஒன்றிணைவது போன்ற விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் 'எனிமி' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஷால் மற்றும் ஆர்யா ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருந்தனர். ஆர்யாவை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக வருகிறார் விஷால். ஹீரோ இவராக இருந்தாலும், வில்லனாக நடித்துள்ள ஆர்யா இவரை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒவ்வொரு காட்சிகளிலும் நடித்திருந்தார் என ரசிகர்கள் கூறினர்.
இந்நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து சில தகவல் கசிந்துள்ளது. அதாவது, அநேகமாக ஆயுதபூஜை திருநாளை முன்னிட்டு 'எனிமி' படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், எனவே அக்டோபர் 13ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், விரைவில் 'எனிமி' ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது.