காதலர்களுக்கு எச்சரிக்கையோடு வாழ்த்து கூறிய இயக்குனர் சுசீந்தரன்...!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான காதலர்கள் இன்று காதலர்தினத்தை கொண்டாடி வருகின்றனர். காதலர் தினத்தை முன்னிட்டு, கிரீடிங் கார்ட், ரோஜா பூ, மற்றும் காதலர்களுக்கான விதவிதமான பரிசு பொருட்களின் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.
பிப்ரவரி 14
காதலர்களின் முக்கிய நாளான இன்று பல பிரபலங்கள் அனைத்து காதலர்களுக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் சுசீந்தரன்:
இந்நிலையில் இயக்குனர் சுசீந்தரனும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதுவும் எச்சரிக்கையோடு... இவர் இயக்கிய 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தின் கிளைமாக்ஸில் காதலர்களால் பாதிக்கப்படுவது அவர்களுடைய குழந்தை தான் என்பதை மிகவும் உணர்சிவசத்தோடு கூறியிருப்பார்.
எச்சரிக்கை:
காதலர்கள் கண்ணியமாக நடந்துக்கொள்ளவில்லை என்றால் இப்படி தான் நடக்கும் என்பதை எச்சரிக்கையோடு கூறி சுசீந்திரன் காதலர் தின வாழ்த்தில் சூசகமாக கூறியுள்ளார்.
Happy valentines day pic.twitter.com/r6HnMIVlGc
— Suseenthiran (@dir_susee) February 13, 2018