பா.ரஞ்சித் படத்தில் துருவ் விக்ரம்..! வெளியான மாஸ் அறிவிப்பு..!
நடிகர் விக்ரமின் மகன், துருவ் விக்ரம் ஏற்கனவே தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காக தமிழில் எடுக்கப்பட்ட 'ஆதித்ய வர்மா' படத்தில் நடித்தார். தெலுங்கில் கிடைத்த வரவேற்பு தமிழில் கிடைக்காமல் போனது.
நடிகர் விக்ரமின் மகன், துருவ் விக்ரம் ஏற்கனவே தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காக தமிழில் எடுக்கப்பட்ட 'ஆதித்ய வர்மா' படத்தில் நடித்தார். தெலுங்கில் கிடைத்த வரவேற்பு தமிழில் கிடைக்காமல் போனது.
இதை தொடர்ந்து தற்போது துருவ், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அதிகார பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை, ஏற்கனவே ’பரியேறும் பெருமாள்’ மற்றும் ’கர்ணன்’ ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ள மாரி செல்வராஜ் இயக்குகிறார்.
இந்த படத்தை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ மற்றும் ’காலா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரும், பரியேறும் பெருமாள், மற்றும் ஒரு சில படங்களை தயாரித்து வரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் தயாரிக்க உள்ளார். அதே போல் தற்போது, பா.ரஞ்சித் முதல் முறையாக ஆர்வயை வைத்து இயக்கியுள்ள 'சார்பட்டா' திரைப்படமும் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா.ரஞ்சித் தயாரிப்பில், துருவ் நடிக்க உள்ள படம் குறித்த தகவல் தற்போது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாறி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' நடிகர் கதிருக்கு திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது போல், துருவ் விக்ரமுக்கு திருமுனையான படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் துருவ்விக்ரம் விரைவில் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.