தேசிய விருது பெற்ற இயக்குனர் படத்தின் தனுஷ்..! வெளியான அதிகார பூர்வ அறிவிப்பு..!
நடிகர் தனுஷ் ஏற்கனவே 2 பாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில், இந்தி உள்ளிட்ட 3 மொழிகளில் நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி தனுஷ் ரசிகர்களை உட்சாக படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் ஏற்கனவே 2 பாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில், இந்தி உள்ளிட்ட 3 மொழிகளில் நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி தனுஷ் ரசிகர்களை உட்சாக படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கர்ணன் படம் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு, பல பாலிவுட் நடிகர்கள், இயக்குனர்கள் கூட தனுஷின் இயல்பான நடிப்பையும், இயக்குனர் மாரி செல்வராஜின் தனித்துவமான இயக்கத்தையும் மனதார பாராட்டி இருந்தனர். இந்நிலையில், தனுஷ் தற்போது ஹாலிவுட்டில் நடித்து வரும் 'தி கிரே மேன்' படத்திற்காக கடந்த பிப்ரவரி மாதமே குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து விட்டாலும், தற்போது இவருடைய மாமனாரும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த், மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதால் தனுஷ் இந்தியா திரும்புவதில் தாமதம் ஆகும் என கூறப்படுகிறது.
இந்தியா வந்த கையோடு, கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம், தன்னுடைய சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம், மற்றும் 'அசுரன்' பட இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக நடிக்க உள்ளார். இதை தொடர்ந்து இவர் அடுத்ததாக நடிக்க உள்ள பாலிவுட் படம் ஒன்றின் தகவலும் வெளியாகியுள்ளது.
தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதை போஸ்டர் வெளியிட்டு படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை நாராயணதாஸ் நரங் என்பவர் தன்னுடைய 4 ஆவது படமாக தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெற்றிவேல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.