கதாநாயகனாக மாறிய காமெடி நடிகர்...! ஜோடியான 'குக் வித் கோமாளி பவி!
ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’, விஜய் சேதுபதி நடித்த ‘கவன்’, தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘பிகில்’ உள்ளிட்ட பல தரமான திரைப்படங்களை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்த கல்பாதி எஸ் அகோரம், அடுத்ததாக தான் தயாரிக்க உள்ள வித்தியாசமான மற்றும் புதுமையான கதை அம்சத்துடன் கூடிய புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’, விஜய் சேதுபதி நடித்த ‘கவன்’, தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘பிகில்’ உள்ளிட்ட பல தரமான திரைப்படங்களை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்த கல்பாதி எஸ் அகோரம், அடுத்ததாக தான் தயாரிக்க உள்ள வித்தியாசமான மற்றும் புதுமையான கதை அம்சத்துடன் கூடிய புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் பல முன்னணி ஹீரோக்களின் வெற்றிப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ள சதீஷ், இப்படத்தின் மூலமாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனம் கவர்ந்த பவித்ரா லட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இளவரசு, லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தன் மற்றும் ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பல குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்களை இயக்கி விருதுகளை வென்றுள்ளவரும், யார்க்கர் ஃபிலிம்ஸ் எனும் யூடியூப் சேனலை நடத்தி வருபவருமான கிஷோர் ராஜ்குமார் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் 21-வது படைப்பான இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அர்ச்சனா கல்பாதி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் உள்ளார்.
திரைப்படத்தை பற்றி கூறும் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார், “மிகவும் வித்தியாசமான இந்த படத்தின் கதை நகைச்சுவை ததும்ப விவரிக்கப்பட உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெரிய திரையில் கண்டு மகிழும் வகையிலான ஃபேண்டசி காமெடியாக இத்திரைப்படம் திகழும்,” என்கிறார். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதை வசீகரித்த பவி, நாயகியாகவும்... காமெடி நடிகராக இருந்து கதாநாயகியாக உயர்ந்துள்ள சதீஷுக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த படபூஜையில் நட்பு ரீதியாக சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டு சிறப்பித்தார்