MeToo ஹாஷ்டாக் பயன்படுத்தி, பாடகி சின்மயி வைரமுத்துவின் வெளியிட்ட பின்பு, தொடர்ந்து பெண்கள் பலர் நடிகர் ராதாரவி, நடன இயக்குனர் கல்யாண் என வரிசையாக வெளியிட்டு வரும் நிலையில் தற்போது பிரபல கிரிக்கெட் வீரரின் பெயர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MeToo ஹாஷ்டாக் பயன்படுத்தி, பாடகி சின்மயி வைரமுத்துவின் வெளியிட்ட பின்பு, தொடர்ந்து பெண்கள் பலர் நடிகர் ராதாரவி, நடன இயக்குனர் கல்யாண் என வரிசையாக வெளியிட்டு வரும் நிலையில் தற்போது பிரபல கிரிக்கெட் வீரரின் பெயர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். பெயர் வெளியிட விரும்பாத அந்த பெண்ணின் சார்பில் அவரது குற்றச்சாட்டை பாடகி சின்மயில் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

எனது பெயரை சொல்ல விருப்பவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் மும்பையில் இருந்த பொது நடந்த சம்பவம் இது. அப்போது அங்குள்ள ஓட்டலில் தங்கியிருந்த எனது தோழியை சந்திக்க சென்றேன். அங்கு ஐ.பி.எல். கிரிக்கெட்டின் மூலம் பிரபலமான இலங்கை வீரை நிற்பதை பார்த்ததும் பரவசப்பட்டேன்.

என்னிடம் பேச்சு கொடுத்த அவர், எனது தோழி அவரது அறையில் இருப்பதாக கூறினார். அதை நம்பி நானும் அங்கு சென்றேன். அறையில் எனது தோழி இல்லை. அப்போது இலங்கை வேறை என்னை படுக்கையில் தள்ளி தவறாக நடக்க முயற்சித்தார். அந்த சமயம் ஹோட்டல் ஊழியர் கதவை தட்டினார்.

கதவை திறந்ததும் நான் அங்கிருந்து ஓடிவிட்டேன். இதை வைத்து, அவர் பிரபலம் என்பதால் நானாக அவரது அறைக்கு சென்றிருக்கலாம் என்று சிலர் கூறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 

இதே போல் இலங்கை அணியின் முன்னாள் கேட்டான் ரணத்துக்கா தனக்கு இந்தியாவில், உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய விமான பணிப்பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.