Asianet News TamilAsianet News Tamil

இயக்குநர் சேரனுக்கு செக் வைக்கக் காத்திருக்கும் மூன்று கதாநாயகிகள்...

’திருமணம் சில திருத்தங்களுடன்’ படத்துடன் சுறுசுறுப்பாக தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கும் சேரன், அதே பரபரப்புடன் ‘ராஜாவுக்கு செக்’ என்னும் படத்திலும் நடித்துமுடித்திருக்கிறார். திருமணத்தில் திருத்தம் செய்ய விரும்பியதாலோ என்னவோ அவருக்கு இப்படத்தில் மூன்று கதாநாயகிகள்.

cheran's new movie rajavukku check
Author
Chennai, First Published Jan 25, 2019, 9:50 AM IST

’திருமணம் சில திருத்தங்களுடன்’ படத்துடன் சுறுசுறுப்பாக தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கும் சேரன், அதே பரபரப்புடன் ‘ராஜாவுக்கு செக்’ என்னும் படத்திலும் நடித்துமுடித்திருக்கிறார். திருமணத்தில் திருத்தம் செய்ய விரும்பியதாலோ என்னவோ அவருக்கு இப்படத்தில் மூன்று கதாநாயகிகள்.cheran's new movie rajavukku check

இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் சாய் ராஜ்குமார். பெயர் புதிது போல் தோன்றினாலும், ஏற்கனவே ’ஜெயம்’ ரவியை வைத்து தமிழில் ’மழை’ என்கிற படத்தை இயக்கிய அதே ராஜ்குமார் தான் இவர். கொஞ்ச காலம் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றுவிட்டு தற்போது சாய் ராஜ்குமார் ஆக மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இந்த படம் குறித்த சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் சாய் ராஜ்குமார்...

‘ராஜாவுக்கு செக்’ படத்தின் கதையை உருவாக்கி முடித்ததுமே இதில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்கிற கேள்வி எழுந்தபோது முதல் ஆளாக என் மனதில் தோன்றியவர் சேரன் தான்.காரணம் சில விஷயங்களை சிலர் சொன்னால்தான் அது சேரவேண்டிய இடத்திற்கு சரியாக சென்று சேரும்.

இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு முக்கிய பிரச்சனையை மத்திம வயதில் உள்ள அதேசமயம் மக்களுக்கு நன்கு அறிமுகமான சேரன் போன்ற ஒரு நடிகர் சொன்னால் மட்டுமே அது பொதுமக்களிடம் சரியான விதத்தில் சென்று சேரும் என உறுதியாக நம்பினோம். அந்தவகையில் இந்த படத்தில் சேரன் ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்..

எமோஷனல் த்ரில்லாராக உருவாகியுள்ள ‘ராஜாவுக்கு செக்’ , இதுவரை தமிழ் சினிமாவில் வந்திராத ஒரு ஜானரை சேர்ந்த படம் என தைரியமாகச் சொல்வேன். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில்தான் சேரன் தனது ’திருமணம்’ படத்தையும் ஒரே மூச்சில் உருவாக்கிக் கொண்டிருந்தார்.cheran's new movie rajavukku check

அந்த நேரத்தில் ‘ராஜாவுக்கு செக்’ படத்தில் சேரனுக்கு ஒரு கெட்டப் சேஞ்ச் பண்ண வேண்டியிருந்தது. அதைக் கணக்கிட்டு, அவர் திருமணம் படத்தில் நடித்து முடித்துவிட்டு வந்ததும், அவரது கெட்டப்பினை மாற்றி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கினோம். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவுபெற்று இன்னும் சில நாட்களில் முதல் காப்பி கைக்கு வந்துவிடும். சென்சார் சான்றிதழ் மற்றும் தயாரிப்பாளர் சங்க தேதி ஒதுக்கீடு ஆகிய விஷயங்களுக்குப் பிறகு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முறையாக அறிவிக்கப்படும்” என்கிறார் இயக்குநர் ராஜ்குமார்.

‘ராஜாவுக்கு செக்’ வைக்கும் ராணிகளாக மலையாள திரையுலகைச் சேர்ந்த சரயூ மோகன், நந்தனா வர்மா மற்றும் ஒரு முக்கியவேடத்தில் சிருஷ்டி டாங்கே என மூன்று பேர் நடித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios