உச்சகட்ட அதிர்ச்சி... இயக்குனர் கே.வி.ஆனந்த் மரணத்திற்கு... பிரபலங்கள் இரங்கல்..!
நடிகர் விவேக் மரணித்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத திரையுலகம் தற்போது அடுத்த இழப்பை சந்தித்துள்ளது. பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதை தொடர்ந்து, இவரது மரணத்திற்கு தொடர்ந்து பல பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தளத்தில், இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்....
நடிகர் விவேக் மரணித்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத திரையுலகம் தற்போது அடுத்த இழப்பை சந்தித்துள்ளது. பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதை தொடர்ந்து, இவரது மரணத்திற்கு தொடர்ந்து பல பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தளத்தில், இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்....
பத்திரிகையில் புகைப்படக்கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய கே.வி. ஆனந்த், சினிமாவுக்குள் ஒளிப்பதிவாளராக நுழைந்து பின் இயக்குனராக அவதாரம் எடுத்தவர். பிரித்வி ராஜ், ஶ்ரீகாந்த் நடிக்க 'கனா கண்டேன்' எனும் படத்தை முதன்முதலாக தமிழில் இயக்கினார்அதன் பிறகு தொடர்ந்து 'அயன்', 'மாற்றான்', 'காப்பான்' எனப் பல படங்களை நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து அடுத்தடுத்து வித்தியாசமான கதை களம் கொண்ட படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை ரசிகர்கள் மனதில் பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதனை நம்பமுடியவில்லை என தெரிவித்து... தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.