சீரியல் நடிகராக மாறிய பாபி சிம்ஹா...! இது தான் காரணமா...?
'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் தமிழில் அறிமுகமான நடிகர் பாபி சிம்ஹா, இந்தப் படத்தை தொடர்ந்து 'பீசா', 'சூதுகவ்வும்' ஆகிய படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
இவர் ஜிகிர்தண்டா படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் இவர் கதாநாயகனாக நடித்தார். ஆனால் இவர் தேர்வு செய்து நடித்தப் படங்கள் இவருக்கு எதிர்ப்பார்த்த அளவிற்க்கு வெற்றியை கொடுக்கவில்லை.
தற்போது இவர் நடிகர் விக்ரம் நடித்து வரும் சாமி 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அடுத்து பாபி சிம்ஹா ஒரு வெப் சீரியலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு ‘ஜிகர்தண்டா’ படத்தைப் போல பயங்கர வில்லன் கேரக்டர் என்றும் பாபி சிம்ஹா ஜோடியாக பார்வதி நாயர் நடிக்க உள்ளதாகவும் இந்தப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் நடிகர் மாதவன் Breathe என்கிற வெப் சீரியலில் நடித்தார் இந்த சீரியல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது நிலையில். பாபி சிம்ஹாவும் தற்போது வெப் சீரியலில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். மேலும் இவர் வெப் சீரியலில் நடிக்க காரணம் பட வாய்புகள் இல்லாதது என்றும் கூறப்படுகிறது.