ஐயோ பாவம்... இந்த முறையும் லக்ஸூரி பட்ஜெட்டில் கை வைத்த பிக்பாஸ்..! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த மணிக்கூண்டு என்கிற வித்தியாசமான டாஸ்க் இன்று முதல் முடிவுக்கு வந்துள்ளது. இதில் ஒரு சராசரி மனிதன் எப்படி தங்களுடைய வேலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிகிறானோ, அதே போல் இவர்களும் தங்களுடைய வேலைகளை குறுப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று பிக்பாஸ் கூறியிருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த மணிக்கூண்டு என்கிற வித்தியாசமான டாஸ்க் இன்று முதல் முடிவுக்கு வந்துள்ளது. இதில் ஒரு சராசரி மனிதன் எப்படி தங்களுடைய வேலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிகிறானோ, அதே போல் இவர்களும் தங்களுடைய வேலைகளை குறுப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று பிக்பாஸ் கூறியிருந்தார்.
குறிப்பாக, மூன்று மணிநேரத்திற்கு ஒரு முறை, ஒவ்வொரு அணியை சேர்ந்தவர்களும், அலாரமாக மாறி மணியை கணிக்க வேண்டும். வெய்யில், மழை என்று பாராமல் போட்டியாளர்கள் பட்ட கஷ்டத்தை இந்த இரண்டு நாட்களும் பார்க்க முடிந்தது.
கடந்த வாரம் லக்சரி பட்ஜெட் ஜீரோ என்பதால் இந்த வாரம் லக்ஸூரி பட்ஜெட்டை கை பற்ற வேண்டும் என்பதற்காக போட்டியாளர்கள் சின்சியராக விளையாடினார்கள்.
இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோவில் மணிக்கூண்டு டாஸ்க் முடிவுகள் அறிவிக்கப்பட்ட காட்சி இடம்பெற்றுள்ளது. இதை தொடர்ந்து வெளியான, இரண்டாவது ப்ரோமோவில், ஷிவானி மற்றும் பாலாவை வைத்து பங்கமாக கலைத்தார் ரம்யா. மூன்றாவது ப்ரோமோவில், இந்த வாரத்திற்கான லக்ஸூரி பட்ஜெட் அறிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு அணியினருக்கும் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தனி தனியே ஷாப்பிங் செய்து கொள்ளாமல் என தெரிவிக்கிறார் பிக்பாஸ். அதன் படி போட்டியாளர்கள் தனித்தனியாக சென்று ஷாப்பிங் செய்கிறார்கள். இவர்களில் ஒரு அணியை சேர்ந்தவர்கள் மட்டும், கொடுக்கப்பட்ட மதிப்பெண்களை விட அதிகமாக ஷாப்பிங் செய்ததால், அவர்களது பட்ஜெட் தள்ளுபடி செய்யப்படுவதாக பிக்பாஸ் அறிவிக்கிறார்.
இது குறித்த ப்ரோமோ இதோ....