Asianet News TamilAsianet News Tamil

அர்ச்சனா செயலால் கமலுக்கு ஏற்பட்ட மனக்குறை..! இது தான் விஷயம்..!

அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் 2 வாரத்தை எட்டுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் உள்ளதாகவும் வேஷ்டி கொடுத்தது பற்றியும், டிக்கெட் ஃப்ரீ டஸ்கில் கூறி ஒரு பிரச்சனையே வந்திருக்கும் அதை தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் பேசியுள்ளார் கமல்.
 

biggboss 3rd promo kamal said vesti issue
Author
Chennai, First Published Oct 17, 2020, 7:18 PM IST

அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் 2 வாரத்தை எட்டுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் உள்ளதாகவும் வேஷ்டி கொடுத்தது பற்றியும், டிக்கெட் ஃப்ரீ டஸ்கில் கூறி ஒரு பிரச்சனையே வந்திருக்கும் அதை தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் பேசியுள்ளார் கமல்.

மற்ற நாட்களை விட, கமல் போட்டியாளர்களிடம் பேசும் சனி மற்றும் ஞாயிற்று கிழமை வழக்கத்தை விட பல ரசிகர்கள் மற்றும் மக்கள் ஆர்வமுடன் பார்ப்பார்கள். இதற்க்கு காரணம், அந்த வாரத்தில் நடத்த நல்ல விஷயம் மற்றும் கேட்ட விஷயம் என அனைத்தையும் அலசி ஆராய்ந்து கமல் பதிலடி கொடுப்பர் என்பதால் தான்.

biggboss 3rd promo kamal said vesti issue

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில், முதல் கேள்வியை அர்ச்சனாவை பார்த்து தான் கேட்கிறார். அர்ச்சனா எல்லோருக்கும் பட்டம் கொடுத்தீங்க, அதில் சின்னதா தனக்கொரு மனகுறை உள்ளதாக கமல் கூற, அதற்க்கு அர்ச்சனா என்னவென சொல்லுங்கள் ஐயா என கேட்கிறார். என் பட்டத்தை எடுத்துக்கிடீங்க நீங்க. மக்கள் பிரதிநிதி என கடந்த மூன்று சீசனாக கூறி வருகிறேன் அதை அவர்களும் நம்பி விட்டார்கள் என கூறுகிறார்.

biggboss 3rd promo kamal said vesti issue

பின்னர் எல்லோர் முகமூடியும் எப்போது கழலை போகிறது என்கிற ஆர்வத்தில் எல்லோரும் இருப்பார்கள். ஆனால் வேஷ்டி அப்படி இல்லை கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் என சொல்கிறார். கமல் இதை கூறியதும் வேல்முருகன் கீழே குனிந்து சிரிக்கிறார். அதே நேரத்தில் கமல் என்ன கூறுவார் என்கிற ஒரு கவலை சுரேஷ் முகத்தில் இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. அவருக்கு தெரியாது அவர் தான் தற்போதைய பிக்பாஸ் வீட்டின் ஹீரோ என்பது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios