Asianet News TamilAsianet News Tamil

50 லட்சத்தை பிக் பாஸ் ராஜு என்ன செய்யப்போகிறார் தெரியுமா?..முதல் முறையாக மனம் திறந்த டைட்டில் வின்னர்..

பிக் பாஸ் வெற்றிக்கு பின்னர் முதல் முறையாக பேட்டியளித்துள்ள ராஜு தன்னை தேடி எக்கச்சக்க வாய்ப்புகள் வாயில் தட்டுவதாக கூறியுள்ளார்.

bigg boss raju interview...
Author
Chennai, First Published Jan 20, 2022, 12:39 PM IST

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த 5 சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார்.

BiggBoss Raju upset after know valimai movie not released

கடைசியாக நடந்து முடிந்த 5-வது சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு பிக்பாஸ் டிராபியும், ரூ.50 லட்சம் பணமும் பரிசாக வழங்கப்பட்டது. பிரியங்கா இரண்டாம் இடம் பிடித்தார். டைட்டில் ஜெயித்த ராஜுவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

BiggBoss Raju upset after know valimai movie not released

கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ராஜு, இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இதுதவிர விஜய் டிவி நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் பாணியாற்றி உள்ளார் ராஜு. கடைசியாக இவர் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் நடித்து வந்தார்.

BiggBoss Raju upset after know valimai movie not released

அந்த சமயத்தில் தான் இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் அவரது வாழ்க்கையே மாறிவிட்டது. மக்களின் மனங்களை வென்ற போட்டியாளராக இருந்ததோடு மட்டுமின்றி டைட்டில் வென்றும் அசத்தினார். பிக் பாஸ் வெற்றிக்கு பின்னர் முதல் முறையாக பேட்டியளித்துள்ள ராஜு தன்னை தேடி எக்கச்சக்க வாய்ப்புகள் வாயில் தட்டுவதாக கூறியுள்ளார். அதோடு பரிசு தொகை வைத்து மனைவிக்கு என்ன வாங்கி தருவீர்கள் என கேட்டதற்கு மொத்த பணத்தையும் அவளுக்கு தான் தருவேன் என்றும் இதுவரை எதுவுமே என்னிடம் எதிர்பார்க்காத தன்மனைவியை இனி வெற்றி பணத்தை வைத்து மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார் ராஜு.. 

Follow Us:
Download App:
  • android
  • ios