Asianet News TamilAsianet News Tamil

முதலில் அம்மா, அடுத்து அப்பா 10 நாளில் இருவரையும் பறிகொடுத்த பிக்பாஸ் பிரபலம்... உருக்கமான கண்ணீர் பதிவு...!

ஒரு சிறந்த கணவர்.. என் அம்மா கடந்த நான்கு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்தார். 

bigg boss fame loss their parents between 10 days creating huge sadness
Author
Chennai, First Published Sep 1, 2020, 7:46 PM IST

இந்தி பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானவர் கெளரவ் சோப்ரா. இவர் தமிழில் கூட அர்ஜுனின் ஒற்றன் படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்தி சீரியல்களில் நடித்து வரும் கெளரவ் சோப்ராவின் வாழ்க்கையில் ஏற்பட்ட பரிதாப நிலை, ஒட்டுமொத்த திரையுலகையும் அவருடைய ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

bigg boss fame loss their parents between 10 days creating huge sadness

கடந்த சில வருடங்களாக கேன்சரால் போராடி வந்த அவரது அம்மா கடந்த 10  நாட்களுக்கு முன்பு மரணமடைந்தார். இந்த சோகத்தில் அவர் மீள்வதற்குள்ளாகவே அவரது அப்பாவும் மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

bigg boss fame loss their parents between 10 days creating huge sadness

 

அதில், ஸ்வதந்திர சோப்ரா என் நாயகன். என் உத்வேகம்... அவருடைய மில்லியனில் ஒரு பங்கு அளவிற்காகவது நான் வருவேனா என்பது சந்தேகமே?. சிறந்த மனிதர், சிறந்த மகன், சிறந்த சகோதரர், குடும்பத்தை எப்போதும் எல்லாவற்றிற்கும் மேலாக வைத்திருக்கும் ஒரு மனிதன். ஒரு சிறந்த தந்தை ... எல்லா தந்தையர்களும் அவரைப் போன்றவர்கள் அல்ல என்ற உண்மையைப் புரிந்துகொள்ள எனக்கு 25 ஆண்டுகள் பிடித்தன... அவர் சிறப்புடையவர் .. அவரது மகனாக நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்ந்தேன். 

bigg boss fame loss their parents between 10 days creating huge sadness

அன்பானவர்,  நான் சிறு வயதில் தெருவில் நடந்து சென்றாலோ, மார்க்கெட்டுக்கு சென்றாலோ என்னை பார்ப்பவர்கள் சோப்ரா சாபின் மகன் என்பார்கள். கடைக்காரர் என்னிடம் குறைவாகவே பணம் வாங்குவார். எங்கள் வீட்டை தேடியவருக்கு அடையாளம் காட்ட யாராவது துணைக்கு வந்து கேட்டில் நிற்பதை அடிக்கடி பார்க்க முடியும்.  "சோப்ரா சாபின் வீடு?"  என்று கூறினால் போதும் யாராக இருந்தாலும் அழைத்து வந்து எங்கள் வீட்டில் விடுவார்கள்.

bigg boss fame loss their parents between 10 days creating huge sadness

ஒரு சிறந்த கணவர்.. என் அம்மா கடந்த நான்கு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்தார். அந்த நான்கு ஆண்டும் அப்பா அவரை அவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொண்டார். அம்மாவுடன் இருக்க எங்களை விட்டுச் சென்றுவிட்டார். அம்மா கடந்த 19ம் தேதி மரணம் அடைந்தார். அப்பா 29ம் தேதி உயிர் இழந்தார். 10 நாட்கள்...இருவரும் சென்றுவிட்டார்கள். அவர்களின் இழப்பால் ஏற்பட்டுள்ள வெற்றிடம் என்றுமே அப்படியே இருக்கும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதை பார்த்த அவருடைய ரசிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
a

Follow Us:
Download App:
  • android
  • ios