Asianet News TamilAsianet News Tamil

BiggBoss5 | சிபி விஷயத்தில் தவறான தீர்ப்பளித்த ரம்யா கிருஷ்ணன்? உண்மையில் நடந்து என்ன? கடுப்பான ரசிகர்கள்!!

BiggBoss5 | முழுக்க முழுக்க அக்‌ஷரா மீது தவறிருக்கும் பட்சத்தில் இந்த வார இறுதி எபிசோட்டை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் அக்‌ஷராவை கொஞ்சியதோடு, சிபியை குற்றவாளியாக்கியது ரசிகர்களை எரிச்சல் மூட்டியுள்ளது.

Bigg Boss 5 Week End Episode
Author
Chennai, First Published Nov 28, 2021, 8:27 AM IST

கமலுக்கு பதில் பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த வார இறுதி எபிசோடை நடிகை ரம்யாகிருஷ்ணன்  தொகுத்து வழங்கினார்.துவக்கத்தில் அன்பாக அனைத்து ரசிகர்களையும் விசாரிக்க துவங்கிய ரம்யா கிருஷ்ணன் யாரும் எதிர்பாராத விதமாக அக்ஷராவை மெழுகு டால் நீ என்று பாடி வர்ணித்த அவருக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்தார். இதை தொடர்ந்து வார்டனாக சிபி எப்படி? என போட்டியாளர்களிடம் கேட்க அவரின் கடுமையான நடவடிக்கை குறித்து தங்களது ஆதங்கத்தை கொட்ட துவங்கினார்கள் சக ஹவுஸ்மேட்.

 நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள் என்று கேட்டு வறுக்க தொடங்கினார். அப்போது சிபி ; எனது கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப என்னை எதையும் செய்ய விடவில்லை என கூற, ராஜமாதாவாக மரியா ரம்யா கிருஷ்ணன் தேவி ஸ்டைலில் சேட்டை செய்ய விடவில்லையா அல்லது எதையும் செய்ய விடவில்லையா என கிடுக்குப்பிடி போட்டார். இருந்தும் அசராத சிபி நான் என் வேலையை செய்தேன் என கூறினார். அதோடு பிரியங்காவிடமும் உங்களுக்கு தோன்றியதை நீங்கள் செய்யுங்கள் எனக்கு கொடுக்கப்பட்டதை நான் செய்கிறேன் என்றேன் என ரம்யா கிருஷ்ணனிடம் தெளிவுப்படுத்தினார் சிபி.

Bigg Boss 5 Week End Episode

ஆனால் சிபியின் பேச்சில் உண்மை இல்லை என்பதை போல  நீங்கள் சொன்னதை நாங்கள் பார்க்கவில்லை என சூடான வார்த்தையை எறிந்தார் ரம்யா. இவ்வாறு ரம்யா கிருஷ்ணன் நடந்து கொண்டது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

உண்மையில் முந்தைய வாரம் நடைபெற்ற  "கனா காணும் காலங்கள் டாஸ்கில்" ஸ்கூல் வார்டன் ரோலில் சிபி நடிக்க, கடுப்பான அக்‌ஷரா பயங்கரமாக  பொறித்து தள்ள வீடே ரணகளம் ஆகியது. அதே நேரம் இவ்வளவு பிரச்சனையிலும் பொறுமையை இழக்காமல், மரியாதையுடன் பேசி இந்த பிரச்சனையை ஸ்மார்ட்டாக ஆண்டில் செய்த சிபிக்கு ஆதரவுகள் பெருகியது.

பிக் பாஸ் வீட்டில் 52 ஆவது நாள் வார்டன் சிபி திருக்குறள் டாஸ்க் கொடுக்க, எரிச்சலான அக்‌ஷரா, கடுப்பில் கத்தி விட்டு நேராக பாத்ரூம் செல்கிறார். அதுமட்டுமில்லை போற போக்கில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பூச்செடி தொட்டியையும் உடைக்கிறார்.  அதோடு சிபி அதிகாரம் செய்வது பிடிக்காமல் தன்னையும் அடித்துக் கொண்டு, வீட்டில் இருக்கும் பொருட்களையும் உடைத்து களேபரம் செய்கிறார் அக்‌ஷரா.

Bigg Boss 5 Week End Episode

அதே போல், பாத்ரூமில் அபிநவ்விடம் அக்‌ஷரா சிபி பற்றி மரியாதை இல்லாமல் பேசியது, தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியது எல்லாம் கேமிராவில் ரெக்கார்டு ஆகியது.  கடைசியில் வார்டன் சிபியே போய் பேசியும் பயனில்லை. அக்‌ஷராவின் இவ்வளவு பெரிய சீனை ஹவுஸ்மேட்ஸ் கண்டுகொள்ளாமல் தங்களது டாஸ்கை தொடர்ந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறு முழுக்க முழுக்க அக்‌ஷரா மீது தவறிருக்கும் பட்சத்தில் இந்த வார இறுதி எபிசோட்டை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் அக்‌ஷராவை கொஞ்சியதோடு, சிபியை குற்றவாளியாக்கியது ரசிகர்களை எரிச்சல் மூட்டியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios