இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவரா...? வெளியான தகவல்...!
பிக்பாஸ் வீட்டில் இருந்து, வாரம் தோறும் ஒரு பிரபலம் வெளியேறி கொண்டிருக்கின்றனர். அதன் அடிப்படையில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் நடிகர் பொன்னம்பலம், மகத், யாஷிகா, மும்தாஜ் மற்றும் வைஷ்ணவி ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், வாரம் தோறும் இந்த பட்டியலில் என் பெயர் இடம்பெறுவதால் 'நான் மக்களிடம் ரெகுலர் கஸ்டமர் ஆகிவிட்டதாக பொன்னம்பலம் கூறுகிறார். பின் நான் வெளியே போக மாட்டேன் என்ற நம்பிக்கை இருப்பதாக மகத் கூறுகிறார். இதைதொடர்ந்து கமலிடம் பேசிய யாஷிகா நான் இந்த வீட்டில் ரொம்ப சந்தோஷமாக இருப்பதாகவும் அதனால் வெளியேற மாட்டேன் என நம்பிக்கை உள்ளதாக கூறுகிறார்.
இதனால் மீதம் இருக்கும் மும்தாஜ் மற்றும் வைஷ்ணவியை காட்டி ஒருவர் வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்.
மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இந்த வாரம் வைஷ்ணவி வெளியேற்றப்படுவதாகவும், ஆனால் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுஜாவை ஒரு சீக்ரெட் அறையில் தங்க வைத்தது போல் வைஷ்ணவியையும் ஒரு சீக்ரெட் அறையில் தங்க வைக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் வைஷ்ணவி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என சமூக வலைத்தளத்தில் பலர் பதிவு செய்து வருகிறார்கள். இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது இன்று இரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம்.