Asianet News TamilAsianet News Tamil

காலில் எவ்வளவு பெரிய கட்டு.. பரிதாபத்தின் உச்சத்தில் யாஷிகா! கண்ணீரை வரவழைக்கும் புகைப்படம்..!!

யாஷிகாவிற்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர் எப்படி இருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

Actress Yashika anand who met car accident latest photo on hospital bed going viral
Author
Chennai, First Published Aug 9, 2021, 5:57 PM IST

கடந்த ஜூலை 25ம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பிய, யாஷிகா ஆனந்த் டாடா ஹேரியர் காரை படுவேகமாக ஓட்டியுள்ளார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவணி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் இருக்கையில் இருந்ததால் யாஷிகாவின் நண்பர்கள் அமீர், சையது ஆகியோர் சிறு காயங்களுடன் தப்பியதாக தெரிகிறது. 

Actress Yashika anand who met car accident latest photo on hospital bed going viral

விபத்தில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தற்போது சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். யாஷிகாவிற்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது யாஷிகா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Actress Yashika anand who met car accident latest photo on hospital bed going viral

யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு சற்றே உடல் நலம் தேறிய யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழியான வள்ளி செட்டி பவணி மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டிருந்தார். அதேபோல் விபத்தின் போது தான் குடிக்கவில்லை என்றும், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார். மேலும் படுக்கையிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதாகவும், எழுந்து நடக்கவே 5 மாதமாகும் என்றும் யாஷிகா தன்னுடைய உடல் நிலை குறித்து வெளியிட்ட உருக்கமான பதிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

 

யாஷிகாவிற்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர் எப்படி இருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனிடையே காலில் மிகப்பெரிய கட்டுடன், மருத்துவமனை படுக்கையில் பரிதாபத்தின் உச்சமாக படுத்தியிருக்கும் யாஷிகா ஆனந்தின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வேகமாக வைரலாகி வருகிறது. யாஷிகாவின் இந்த போட்டோஸைப் பார்க்கும் ரசிகர்கள் விரைவில் நல்ல படியாக எழுந்து நடப்பீர்கள், கவலைப்படாதீர்கள் என ஆறுதல் கூறி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios