கணவனை கொன்றுவிட்டு நாடு தப்பிய நடிகை..! கள்ளக்காதலின் திக் திக் நிமிடங்கள்..!
கணவனை கொன்றுவிட்டு நாடு தப்பிய நடிகை..! திக் திக் நிமிடங்கள்..!
பணத்திற்காக கணவனை கொன்றுவிட்டு நாடு தப்பிய நடிகை குறித்த விவரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
"மணியான" இயக்குனரின் அஞ்சு எலி பெயர் கொண்ட படத்தில் மொட்டைமாடி காட்சியில் நடனமாடியவர் "த்ரி" நடிகை.பின்னர் சில படங்களில் நடித்து வந்த இவர், இதற்கிடேயே சிக்கிய ஒரு தொழில் அதிபரை வளைத்துப்போட்டு அவரை திருமணம் செய்துக்கொண்டார்.
இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இருந்தபோதிலும், இவர் அடிக்கடி வெளியில் சென்று தனது ஆண் நண்பர்களுடன் வெளியில் சுற்ற தொடங்கி உள்ளார்.
இதனை கண்ட கணவர் சமாளிக்க முடியாமல் ஹாங்காங் சென்று உள்ளார். அங்கிருந்து மனைவிக்கு தேவையான பணத்தை அனுப்பிவைத்து வந்துள்ளார்.
பின்னர் பணம் கேட்டு நச்சரிக்கவே ஒரு கட்டத்தில் ஹாங்காங்கிற்கே தன் மனைவியை அழைத்து சென்று உள்ளார்.
அங்கேயும் இந்த நடிகை செய்வது பிடிக்காமல் போகவே வீட்டிற்கு வருவதையே தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டது என அனைவரையும் நம்ப வைத்து உள்ளார். பின்னர் சந்தேகம் வராமல் இருக்க உடலையும் எரித்து விட்டனர்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் எழுப்பிய சந்தேகத்தின் பேரில்,போலீசார் விசாரணையை தொடங்கியது. அப்போதும் கூட அவருக்கு மாரடைப்பு தான் என ஏற்கனவே மருத்துவரிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழை காண்பித்து எஸ்கேப் ஆகி உள்ளார்
அடுத்த நடவடிக்கையாக நடிகை, கணவருடன் வைத்து இருந்த ஜாயின்ட் அக்கௌண்ட்டிலிருந்து, மொத்த பணத்தையும் சுருட்டி( 50 லட்சம் ) வேறு வங்கி கணக்கில் மாற்றி உள்ளார்
மேலும் கணவர் மீதான ஆயுள் காப்பீட்டு தொகையான 2 கோடி ரூபாய் வசூல் செய்ய அங்குள்ள நிறுவனத்திற்கு சென்ற போது, இவர் சமர்ப்பித்த இறப்பு சான்றிதழ் போலியானது என தெரிய வந்துள்ளது.
பின்னர் அங்கிருந்து, உடனடியாக தப்பித்து சென்னை திரும்பி உள்ளார். அவருடைய பாஸ்போர்டில் வேறு பெயர் இருப்பதால் எளிதில் சென்னை வந்துள்ளார்.
ஆனால் பேச்சு வழக்கில் அழைத்து வந்த பெயரை குறிப்பிட்டு, அவரை தேடப்படும் குற்றவாளி என ஹாங்காங் லோக்கல் பேப்பரில் கூட விளம்பரம் கொடுத்து உள்ளது அந்நாட்டு போலீசார்
சென்னை வந்த நடிகை சும்மா இல்லாமல், ஓய்வு பெற்ற காவல் அதிகாரியை தன் கைக்குள் வளைத்து போட்டு உள்ளார்.
பிறகு எப்படி இவர் மீது சட்டம் பாயும்..?
இந்நிலையில் தான், துபாயை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்திய கம்பெனி ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரியை வளைத்து போட்ட நடிகைக்கு பிஎம்டபிள்யு கார் வாங்கி பரிசாக கொடுத்து உள்ளார். இந்த விவகாரம் தலைமை நிர்வாக அதிகாரியின் மனைவிக்கு தெரியவர, அவர் நடிகையின் அனைத்து செய்கைகளையும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
காவல் துறை அதிகாரியை ஏற்கனவே தன் கைக்குள் வைத்துள்ளதால் எந்த நடவடிக்கையும் அவர் மீது வேகமேடுக்காமல் உள்ளது
இதற்கிடையில் தான், சென்னையில் காரில் சென்று கொண்டிருந்த போது போக்குவரத்து போலீசார் தன்னிடம் 300 ரூபாய் கேட்டதாகவும், பின்னர் சின்ன வாக்குவாதம் செய்த பின்னர் 200 ரூபாய்க்கு இறங்கி வந்துள்ளதாகவும், தன்னை யார் என்று கேட்டதற்கு, நான் இந்திய பிரஜை என தெரிவித்தால் அவர்கள் என்னை பயந்து விட்டுவிட்டார்கள் என காமெடி செய்துள்ள இந்த நடிகையின் அடுத்த கட்ட ஜாம்பாவன் இயற்கையான சலூன் அதிபரை தான்...குறி தப்பாது போல ...
கள்ளக்காதல் பயணம் தொடரும் ....