அடுத்தடுத்த அதிர்ச்சி... மகனை தொடர்ந்து கொரோனாவிற்கு கணவரை பறிகொடுத்த பிரபல நடிகை கவிதா..!
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை கவிதா. இவரது மகன், அண்மையில் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அவரது கணவரும் தற்போது உயிரிழந்துள்ளது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை கவிதா. இவரது மகன், அண்மையில் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அவரது கணவரும் தற்போது உயிரிழந்துள்ளது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்: பிக்பாஸ் ஷெரினுக்கு திருமண ஆசை வந்துடுச்சா? மணமகள் கோலத்தில் மனதை வசீகரித்த போட்டோ ஷூட்!
கடந்த மார்ச் மாதம் இந்தியாவிற்குள் நுழைந்த கொரோனா பெருத்தெற்றின் பாதிப்பால் நாளுக்கு நாள், பலர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். முதல் அலையின் தாக்கத்தை விட இரண்டாவது கொரோனா அலை பல பிரபலங்களின் உயிரை பலி வாங்கியுள்ளது. அந்த வகையில், காமெடி நடிகர் பாண்டு, நடிகர் நிதீஷ் வீரா, பிரபல இயக்குனர் அருண் ராஜா காமராஜின் மனைவி, பாடகர் கோமகன் என பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல நடிகை கவிதா, தன்னுடைய அன்பு மகனை கொரோனாவால் அண்மையில் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழில் தன்னுடைய 11 வயதில் 'ஓ மஞ்சு' என்ற திரைப்படத்தில் முதன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகி, குணச்சித்திர நடிகை என தென்னிந்திய ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர் கவிதா. இவர் கடந்த சில மாதமாக கொரோனா இரண்டாவது அலை காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதால், வீட்டில் இருந்துள்ளார்.
மேலும் செய்திகள்: ஸ்டைலிஷ் ஸ்லிம் லுக்... சும்மா ப்ளூ மூன் போல் பளீச் என பிரகாசிக்கும் பிரியா பவானி ஷங்கர்! லேட்டஸ்ட் போட்டோஸ்!
இடையில் இவரது மகன், சஞ்சய் ரூப்பிற்கு கொரோனா அறிகுறிகள் தென்படவே தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி ஜூன் 15 ஆம் தேதி உயிரிழந்தார். இவரை தொடர்ந்து கவிதாவின் கணவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இவரது உடல்நிலை தொடர்ந்து கவலை கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியானது.
மேலும் செய்திகள்: தன்னுடைய 29 பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகை ராதா மகள் கார்திகா..! கியூட் கொண்டாட்ட புகைப்படங்கள்..!
இந்நிலையில் தற்போது நடிகை கவிதாவின் கணவர் தசரத ராஜும் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே மாதத்தில் கணவர் மற்றும் மகனை அடுத்தடுத்து இழந்துள்ளார். இதைத்தொடர்ந்து பலர் இவருக்கு தங்களுடைய ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள். கவிதா தமிழில் 50 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'என்றென்றும் புன்னகை' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.