அடி தூள்... மொத்த நடிகைகளையும் மிஞ்ச சாதனை முயற்சியில் இறங்கிய ஹன்சிகா..! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
நடிகை ஹன்சிகா 105 நிமிடங்களில், ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் சாதனை படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, இது இவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை ஹன்சிகா 105 நிமிடங்களில், ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் சாதனை படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, இது இவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை ஹன்சிகா தமிழ் திரையுலகின் குட்டி குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர். தனுஷ், விஜய், சிம்பு, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட்டாகி, நடிப்பில் அசத்தி வந்த இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாத நிலை உருவாகியுள்ளது.
பட வாய்ப்புக்காக கொழுகொழுவென இருந்த ஹன்சிகா, ஓவர் ஸ்லிம்மாக மாறியும் பட வாய்ப்பு கிடைக்காததுதான் மிகப்பெரிய ஏமாற்றம் என்றும் கூறலாம். தற்போது தன்னுடைய 50வது படமாக உருவாகியுள்ள 'மகா' படத்தின் பணிகளும் கிட்டதட்ட 90 சதவீதத்துக்கும் மேல் முடிவடைந்துவிட்ட நிலையில், விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் தெலுங்கில் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்க உள்ளார். இதை அடுத்து சாதனை முயற்சியாக 105 நிமிடம் எடுக்கப்பட உள்ள படத்தில் ஒரே ஷாட்டில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஏற்கனவே இதுபோல் பல படங்கள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழில் 'அகடம்' என்கிற படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த 105 நிமிடம் சாதனை முயற்சியாக எடுக்கப்பட உள்ள படத்தில் ஒரே ஷாட்டில், நடிகை ஹன்சிகா மட்டுமே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது, தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தை ராஜா துஷா என்பவர் இயக்குகிறார். தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் இந்த படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சைக்கலாஜிகல் திரில்லர் படமாக இப்படம் உருவாக உள்ளதாகவும், படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.