Bhanupriya Regretted Acting in This film : பிரபலமான நடிகை ஒருவர் தான் அந்த படத்தில் நடித்தது தவறு என்று உணரச் செய்த படம் எது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Bhanupriya Regretted Acting in This film : ஒருகாலத்தில் உச்சநட்சத்திரமாக இருந்தவர். விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், கார்த்திக், ஜெயராம் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.`ஆராரோ ஆரிரரோ` படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளான படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சியாகவும், பாரம்பரியமாகவும் நடித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார். பெரும்பாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து சினிமாவின் உச்சத்தில் இருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடிப்புக்கு முழுக்கு போட்ட பானுப்பிரியா

பானுப்பிரியா தற்போது திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகி இருக்கிறார். நல்ல கதையம்சம் உள்ள படங்கள், தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் செய்கிறார். அதுவும் எப்போதாவது. ஆனால் சில திரைப்படங்களை செய்து தவறு செய்துவிட்டேன் என்று சொல்லியிருக்கிறார் பானுப்பிரியா. அந்த திரைப்படங்களில் தனக்கு சொன்னது ஒன்று, ஆனால் செய்தது ஒன்று என்றும், அதில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை எனவும் சொல்லியிருக்கிறார். அவற்றை விருப்பம் இல்லாமல் செய்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.

பானுப்பிரியா சொன்ன படம் எது தெரியுமா?

பானுப்பிரியா ஏண்டா நடிச்சோம் என ஃபீல் பண்ணிய படம், சமீபத்தில் வந்த `நாட்டியம்` (2021) என்கிற தெலுங்கு படம் தான். ரேவந்த் கோருக்கொண்டா இயக்கிய இந்த படத்தில் கிளாசிக்கல் டான்சர் சந்தியா ராஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் சந்தியாராஜு அம்மா கதாபாத்திரத்தில் பானுப்பிரியா நடித்துள்ளார். ஆனால் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு பெரியதாக முக்கியத்துவம் இல்லை என்றும், கதை சொல்லும்போது கதாபாத்திரம் நன்றாக இருக்கும் என சொன்னதாகவும், இப்படி அப்படி என்று நிறைய பில்டப் விட்டார்கள் என்றும் கடைசியில் செட்டுக்கு போனால் தன்னுடைய கதாபாத்திரத்தை பார்த்து ஷாக் ஆனதாக தெரிவித்திருந்தார்.

ஏமாற்றப்பட்ட பானுப்பிரியா

ரொம்ப முக்கியமான கதாபாத்திரம் என்றும், மகளை உத்வேகம் செய்யும் கதாபாத்திரம் என்றும் சொன்னார்களாம். ஆனால் கடைசியில் பார்த்தால் அப்படி இருக்கவில்லை, நடுவில் நிறுத்த முடியாது அல்லவா, சண்டை வரும். ஏன் என்று சொல்லி செய்தேன், ஆனால் செய்த பிறகு தவறு செய்த ஃபீலிங் வந்தது என்று சொல்லியிருக்கிறார் பானுப்பிரியா. இன்னொரு சினிமா விஷயத்தில் கூட இதேபோல் ஆகிவிட்டது என்று அவர் சொல்லியிருக்கிறார். தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த இன்டர்வியூவில் இந்த விஷயத்தை அவர் சொல்லியிருக்கிறார். அவருடைய கமெண்ட்ஸ் வைரல் ஆகி வருகிறது.