Asianet News TamilAsianet News Tamil

மறக்க முடியாத பிறந்தநாள்... உருக்கமாக வெளியிட்ட பதிவு!

நடிகர் யோகி பாபு, நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், இன்று அதற்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

actor yogi babu thanking for friends
Author
Chennai, First Published Jul 23, 2020, 8:10 PM IST

நடிகர் யோகி பாபு, நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், இன்று அதற்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, வணக்கம்.... அனைவரும் வீட்டில் பத்திரமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கொரோனா என்ற வைரஸ் தொற்று அனைவருடைய வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை செய்து விட்டது. என் வாழ்நாளில் இதுவரை இப்படியொரு பிறந்தநாளை கொண்டாடியது இல்லை. ஏனென்றால் ஏதேனும் ஒரு படப்பிடிப்பில் இருப்பேன் அங்கு என் பிறந்தநாளை கொண்டாடப்படும் , ஆனால் இந்த முறை வீட்டிலேயே கொண்டாடினேன்.

actor yogi babu thanking for friends
இந்த பிறந்த நாளை என் வாழ்க்கையில் இரண்டு வகையில் மறக்கவே முடியாது என்றும் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே மாஸ்க் போட்டு கொண்டு கொண்டாடியது. இரண்டாவது பிறந்த நாள் தின வாழ்த்துக்கள். இந்த அளவுக்கு என் மீது அன்பு பாசம் வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போதும்  பார்க்கும்போதும் , இன்னும் நடிக்க வேண்டும் என்கிற ஊக்கம் கொடுத்துள்ளது. சமூக வளைதளத்தில் பலரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள் . அனைவருக்கும் நான் நன்றி... சொல்லி இருந்தால் அதற்கு ஒரு நாள் பத்தாது என்று தெரிந்து கொண்டேன். ஆகையால் யாருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க வில்லையே என்ற வருத்தம் வேண்டாம்.

 இந்த அறிக்கை மூலம் உங்கள் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என்னை தொலைபேசி வாயிலாக வாழ்த்திய நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், மக்கள் தொடர்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகில் இருக்கும் என் நன்றி நன்றி நன்றி.

actor yogi babu thanking for friends

இந்த சமயத்தில் ஒரு விஷயம் சொல்லலாம் என்று நினைக்கிறேன்... பலரும் தங்களுடைய வேலையை இழந்து தவிக்கின்றனர். சினிமா தொழிலாளர்கள், உதவி இயக்குனர்கள் தொடங்கி எத்தனையோ மக்கள் மிகவும் கஷ்டப் படுகிறார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்யுங்கள். நாம் செய்யும் ஒரு உதவி பிற்காலத்தில் ஏதேனும் ஒரு வகையில் மாற்று உதவியாக நம்மை வந்தடையும். கொரோனா காலம் முடிவடைந்து அனைத்தும் விரைவில் சீராகும் நாம் அனைவரும் விரைவில் பழைய மாதிரி இல்லாமல், நண்பர்கள் கைகொடுத்து கட்டிப்பிடித்து பழகுவோம் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். அதற்கெல்லாம் நான் வணங்கும் முருகன் அருள் புரிவார் என்றும் உங்கள் வீட்டில் ஒருவன் யோகி பாபு என்று தன்னுடைய அறிக்கையின் மூலம் யோகிபாபு நன்றியை தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios