Actor Vijay who played a mourning role as a son thoothukudi lady speech

நடிகர் விஜய் நேற்று நள்ளிரவு தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியும் செய்தார்.

விஜயின் திடீர் வருகை குறித்து தூப்பாக்கி சூட்டில் பலியானவரின், உறவினர் பெண் ஒருவர் கூறியபோது, நள்ளிரவு 2 மணிக்கு இரண்டு மோட்டார் சைக்கிள் எங்கள் வீடு அருகே நின்றது. இந்த நேரத்தில் யார் என்று நாங்கள் கதவை திறந்து பார்த்தபோது விஜய் நின்றிருந்தார்.

நள்ளிரவில் வந்ததற்காக கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டு கொண்ட விஜய், எங்கள் துயரத்தில் ஒரு மகனை போல் பங்கெடுத்து கொண்டார். புகைப்படம் கூட எடுக்க வேண்டாம் என்று கூறி மிகவும் எளிமையாக நடந்துக்கொண்டார். அவருடைய வருகை எங்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது என்று அந்த பெண் உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் நிதியுதவி எதுவும் செய்யாமல் வெறும் புகைப்படங்கள் மட்டும் எடுத்து விளம்பரத்திற்காக சென்ற ஒரு சிலரின் மத்தியில் எளிமையாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவியும் செய்து வந்துள்ளதால் விஜயை தொடர்ந்து பலர் பாராட்டி வருகின்றனர்.