தனது மூன்றாவது திருமண நாளை முன்னிட்டு ஆசை மனைவிக்கு பரிசளிக்க ஃபிளிப்கார்ட்டில் ஐ போன் ஆர்டர் பண்ண அது ஐயோ பரிதாபமான ஒரு போனாக வந்து சேர்ந்த கதையை ட்விட்டரில் புலம்பித்தள்ளியிருக்கிறார் நடிகர் நகுல்.

தனது மூன்றாவது திருமண நாளை முன்னிட்டு ஆசை மனைவிக்கு பரிசளிக்க ஃபிளிப்கார்ட்டில் ஐ போன் ஆர்டர் பண்ண அது ஐயோ பரிதாபமான ஒரு போனாக வந்து சேர்ந்த கதையை ட்விட்டரில் புலம்பித்தள்ளியிருக்கிறார் நடிகர் நகுல்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

‘பாய்ஸ்’ நடிகரும் நடிகை தேவயானியின் தம்பியுமான நகுல் ‘காதலில் விழுந்தேன்’க்குப் பிறகு தொடர்ந்து தேடித்தேடி தோல்விப் படங்களில் நடித்து வருகிறார். அவரால் ஓவர் பில்ட் அப் பண்ணப்பட்டு கடந்த இரு வாரங்களுக்கு முன் ரிலீஸான ‘செய்’ படம் கூட வந்த சுவடு தெரியாமல் சென்றுவிட்டது.

ஏற்கனவே நொந்துபோன நிலையில் இருந்த அவர் தனது மூன்றாவது திருமண நாளுக்கு மனைவிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுப்பதற்காக சில தினங்களுக்கு முன்பு ஃபிளிப்கார்ட்டில் ஒரு ஐ போனுக்கு ஆர்டர் செய்திருக்கிறார். நேற்று டெலிவரியான அந்த போனைப் பிரித்து பார்த்தவருக்கு ‘செய்’ படத்தை இரண்டாவது முறை பார்த்ததுபோல் ஒரு செம ஷாக். போன் அவ்வளவு பாடாவதியாக இருந்தது.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெறிகொண்டு பதிவிட்ட நகுல், ‘நான் எவ்வளவு பெரிய ஸ்டார். எனக்கே ஒழுங்காக பதில் சொல்லாமல் இழுத்தடிக்கிறார்கள். சும்மா விடமாட்டேன் அவர்களை’ என்று விடாமல் தகராறு செய்துகொண்டிருக்கிறார்.