Asianet News TamilAsianet News Tamil

காவல்துறை சார்பில் நடந்த போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி!

தமிழக காவல்துறையினர் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்து கொண்டார்.
 

Actor Karthi participated in the anti narcotics awareness program
Author
First Published Jun 24, 2023, 11:52 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி, நடிப்பை தாண்டி பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார். குறிப்பாக நம் நாட்டின் முதுகெலும்பாக பார்க்கப்படும் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் உதவும் விதத்தில், 'விவசாயி' என்கிற அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் ஒவ்வொரு வருடமும், விவசாயிகள் பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருவது மட்டும் இன்றி, விவாசாயிகளை கௌரவிக்கும் விதமாக விழாக்களும் முன்னெடுக்க படுகிறது.

Actor Karthi participated in the anti narcotics awareness program

சம்பளத்தை குறைத்த ரஜினிகாந்த்! லால் சலாம் மற்றும் 170-வது படத்திற்கு சேர்த்து எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?

இதை தொடர்ந்து தற்போது காவல் துறை சார்பில் நடைபெற்ற போதை பொருளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். மெரினா கடற்கரையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட நடிகர் கார்த்தி பேசியதாவது, ”இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனை பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மது அருந்தினர். இப்போது பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டனர்.

Actor Karthi participated in the anti narcotics awareness program

பள்ளிகளுக்கு அருகே கூட போதைப்பொருட்கள் சகஜமாக விற்கப்படுகின்றன. போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் நம்மிடையே இருப்பவர்கள் தான். அதனை விற்பவரும், புழக்கத்தில் விடுபவரும் நம்மிடையே இருப்பவர்கள் தான். ஆக நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் போதைப்பொருட்களின் பயன்பாட்டை தடுக்க முடியும். மாற்றத்தை கொண்டு வர முடியும். இது சீரியஸான விஷயம். போதைப்பொருட்களில் ஆர்வத்தை காட்டுவதற்கு பதிலாக இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்தை செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தான் இளைஞர்களின் நண்பனாக இருக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மகிழ்ச்சி, சோகம் என எல்லா தருணங்களிலும் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளை கவனித்து நண்பர்களாக வழிநடத்த வேண்டும்” என கார்த்தி பேசினார்.

உச்சகட்ட அதிர்ச்சி..! நடிகர் போஸ் வெங்கட் குடும்பத்தில்... ஒரே நாளில் ஏற்பட்ட அடுத்தடுத்த மரணங்கள்!

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios