நெடுஞ்சாலை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் கொடுத்தவர் நடிகர் ஆரி, இதை தொடர்ந்து நயன்தாரா நடித்த 'மாயா', உள்ளிட்ட நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் திண்டிவனம் பகுதியில் படப்பிடிப்பில் இருந்த ஆரிக்கு, நேற்று இரவு அவரது உறவினர்கள் தொடர்பு கொண்டு, தாயார் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்த்துள்ளார் ஆரி , மேலும் அவரது தாயார் முத்துலட்சுமியின் இறுதி சடங்குகள் சொந்த ஊரான பழனியில் நாளை நடைபெறுவதாக கூறியுள்ளார் .