Asianet News TamilAsianet News Tamil

சனம் ஷெட்டிக்கு குவியும் போட்டியாளர்கள் ஆதரவு..! நிகழுமா அதிசயம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒருவர் வெளியேற உள்ளார். நேற்றைய நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமலஹாசன்,  ஆரி மற்றும் ரம்யா ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக தெரிவித்தார். இதனை அடுத்து இன்றைய முதல் புரமோவில் சனம், அனிதா மற்றும் ஷிவானி ஆகிய மூவரில் ஒருவர் தான் வெளியேற உள்ளனர்.
 

Accumulating rivals support Sanam Shetty
Author
Chennai, First Published Dec 6, 2020, 11:08 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒருவர் வெளியேற உள்ளார். நேற்றைய நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமலஹாசன்,  ஆரி மற்றும் ரம்யா ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக தெரிவித்தார். இதனை அடுத்து இன்றைய முதல் புரமோவில் சனம், அனிதா மற்றும் ஷிவானி ஆகிய மூவரில் ஒருவர் தான் வெளியேற உள்ளனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முதல் புரோமோவில், தற்போது டேஞ்சர் சோனில் உள்ள மூவரில் யார் தங்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களின்  கேட்கிறார். 

Accumulating rivals support Sanam Shetty

அப்போது பலர்  சனம் ஷெட்டிக்கு ஆதரவு தெரிவித்ததை பார்க்க முடிகிறது.  சனம்ஷெட்டி தங்க வேண்டுமென விரும்புவதாக ரியோ, அர்ச்சனா,நிஷா, ஆரி,ரம்யா, ஆகியோர் தெரிவித்தனர். இதில் வித்தியாசமாக அனிதா வெளியே போக வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று ஆரி கூறினார். அப்போது குறுக்கிட்ட கமல் ’யார் தங்க வேண்டும் என்றுதான் நான் கேள்வி கேட்டேன்’ என்று கூற அதனை அடுத்து அவர் ’சனம்’ என்று கூறினார்

அனிதா தங்க வேண்டும் என ஆஜித்தும், ஷிவானி தங்க வேண்டும் என சோம் மற்றும் பாலாஜியும் தெரிவித்தனர்.

Accumulating rivals support Sanam Shetty

மொத்தத்தில் சனம்ஷெட்டிக்கு ஹவுஸ்மேட்ஸ்களின் ஆதரவு குவிந்து இருந்தாலும் அவர் தான் இந்த வாரம் வெளியேற இருப்பதாகவும், குறைவான வாக்குகள் அவர் தான் பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியானது. இருப்பினும், ஏதேனும் அதிசயம் நடக்குமா என்பதும் பிக்பாஸ் ரசிகர்களின் ஆவலாக உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios