நடிகை அபிராமி தனது முன்னாள் காதலன் நிரூப் மற்றும் சக போட்டியாளர்களான அபிநய், ஷாரிக் ஆகியோருடன் இணைந்து சிகரெட் புகைப்பது போன்ற காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழில் தற்போது முதன்முறையாக ஓடிடி தளத்துக்காக மட்டும் பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ள, இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர்.

குறிப்பாக இதில் கலந்துகொண்டுள்ள நிரூப்பும், அபிராமியும் முன்னாள் காதலர்கள். 3 வருடம் காதலித்த இவர்கள், பின்னர் பிரேக் அப் செய்து பிரிந்தனர். பிக்பாஸ் வீட்டில் புகைபிடிப்பதற்கு என தனியாக ஒரு சிறிய அறை இருக்கும். அந்த அறையினுள் போட்டியாளர்கள் புகைபிடிப்பதை இதுவரை ஒளிபரப்பியது இல்லை. ஆனால் தற்போது நடைபெறும் அல்டிமேட் நிகழ்ச்சி ஓடிடி-க்கானது என்பதால், அந்த காட்சிகளை எடிட் செய்யாமல் நேரடியாக ஒளிபரப்பி உள்ளனர்.
அதன்படி நடிகை அபிராமி தனது முன்னாள் காதலன் நிரூப் மற்றும் சக போட்டியாளர்களான அபிநய், ஷாரிக் ஆகியோருடன் இணைந்து சிகரெட் புகைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த காட்சி ஒளிபரப்பப்பட்டதற்கு கடும் கண்டனம் ஒருபுறம் எழுந்து வந்தாலும், மறுபுறம் ஒரு பெண் எப்படி சிகரெட் பிடிக்கலாம் என அபிராமிக்கு எதிராக சிலர் குரல் கொடுத்து வருகின்றனர். அதேவேளையில், அது அவரது தனிப்பட்ட விஷயம், அதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
