Asianet News TamilAsianet News Tamil

கத்துன சுட்டு கொன்றுவேன்... துப்பாக்கி காட்டி மிரட்டி பாடகியை கதற கதற கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்

திருமண நிகழ்ச்சிக்கு பாட வருமாறு அழைத்து, பாடகியை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

28 year old singer gangraped by three men in patna
Author
Patna, First Published May 8, 2022, 10:45 AM IST

பீகாரைச் சேர்ந்த 28 வயதாகும் இளம் பாடகி ஒருவருக்கு, பாட்னாவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாட வருமாறு அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து அந்த இடத்துக்கு சென்றபோது தான் அது போலியான அழைப்பு என தெரியவந்துள்ளது. பாட்னாவை சேர்ந்த பிண்டு குமார், சஞ்சீவ் குமார் மற்றும் கரு குமார் ஆகியோர் தான் பொய் சொல்லி அந்த பாடகியை வரவழைத்துள்ளனர். 

பின்னர் துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ள அந்த மூவரும், கல்யாண மண்டபத்தில் உள்ள அறையில் அந்த பாடகியை அடைத்து வைத்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அதனை வீடியோவும் எடுத்துள்ளனர். பின்னர் நைசாக அவர்களிடம் இருந்து தப்பித்த அந்த பாடகி, அருகில் இருந்த அறையில் சென்று தாப்பாள் போட்டுக்கொண்டாராம்.

28 year old singer gangraped by three men in patna

பின்னர் அங்கிருந்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அந்த மூன்று வாலிபர்களையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் மூவரும் அந்த பெண்ணை கற்பழித்தது உறுதியானதை அடுத்து அவர்கள் மூவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... AK 61 Update : ஏ.கே.61-ல் அஜித்துக்கு ஜோடி நான் தான் - கன்பார்ம் பண்ணிய லேடிசூப்பர்ஸ்டார்... குஷியான ரசிகர்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios