Asianet News TamilAsianet News Tamil

8-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை.. முழு விவரம் இதோ..

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஊரக வளர்ச்சி துறையில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

TNRD kallakurichi recruitment 2023 Apply  for office assistant post at kallakurichi Rya
Author
First Published Dec 15, 2023, 3:08 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலியாக அலுவலக உதவியாளர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 21-டிசம்பர்-2023 அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

காலியிடங்கள் விவரம் : 

அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர் ஆகிய பணிகள் காலியாக உள்ளன.
காலியிட எண்ணிக்கை 3
சம்பளம் ரூ. 15,700 – 58,500/- (மாதத்திற்கு)
பணியிடம் கள்ளக்குறிச்சி - தமிழ்நாடு

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 8 மற்றும் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பதிவு எழுத்தர் பணிக்கு 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  அலுவலக உதவியாளர் 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சம்பள விவரம் : பதிவு எழுத்தர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 15,900 – 58,500/- வரை சம்பளம் கிடைக்கும். அலுவலக உதவியாளர் ரூ. 15,700 – 58,100/- சம்பளம் கிடைக்கும் 

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 01-07-2023 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு செயல்முறை: விண்னப்பதாரர்கல் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

நிபந்தனைகள் :

விண்ணப்பதாரர்கள் கல்விச்சான்று, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவற்றுக்கு கண்டிப்பாக ஆதாரம் கொடுக்க வேண்டும். வயது வரம்பு, கல்வித்தகுதி உள்ள நபர்களிடம் இருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். விண்ணப்படிவத்தில் உள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். தகுதியில்லாத காலம் கடந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சின்ன சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நேரடியாக சமர்ப்பிக்கலாம். அல்லது ஆணையாளர், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம், 606201 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பலாம்.

சென்னை ஆவடி கனரக தொழிற்சாலையில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது? முழு விவரம் உள்ளே.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 21.12.2023

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும், தேதி இடம் ஆகியவை பதிவஞ்சல் மூலம் அனுப்பப்படும். காலியிடங்களுக்கான விவரம் மற்றும் விண்ணப்பப்படிவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான என்ற https://kallakurichi.nic.in/இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Follow Us:
Download App:
  • android
  • ios