Asianet News TamilAsianet News Tamil

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் வேலை.. 10 ஆம் படித்திருந்தால் போதும்..செப்.23 ல் நேர்காணல்..

அஞ்சல் ஆயுள் காப்பீடு / கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 

Recruitment notification 2022 for postal life insurance direct agents posts at ranipet
Author
First Published Sep 16, 2022, 1:38 PM IST

பணியின் பெயர்: காப்பீடு விற்பனை முகவர்

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்கள் வயது 18 - 60க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / உள்ளூரைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு முன்னூரிமை வழங்கபடும்.

மேலும் படிக்க:காலை சிற்றுண்டி திட்டம்.. நெல்லை மாநகரில் 22 பள்ளிகளில் ஆட்சியர் தொடங்கி வைப்பு..

விண்ணப்பிக்கும் முறை:  

ராணிபேட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வரும் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் சுய விவரங்கள் அடங்கிய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்துடன் கலந்துக்கொள்ளலாம். வயது / கல்வி ஆதாரத்திற்கான மூலச் சான்றிதழ், காப்பீட்டுத்துறையில் அனுபவத்திற்கான சான்றிதழ் ஏதாவது இருந்தால், அதன் நகல் ஆகியவற்றுடன் நேர்காணலுக்கு வரவேண்டும்

முக்கிய குறிப்பு: 

சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீடு ஆலோசகர்கள் / முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இதற்கு  விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்: 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அஞ்சல் துறையிலிருந்து ஊதியம் வழங்கப்படமாட்டாது என்றும் முகவர்களின் செயல்பாடு அடிப்படையில் ஊக்கத்தொகை மட்டும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஸ்டாலின் தொகுதியில் மாஸ் காட்டும் பாஜக..! மோடி பிறந்தநாளில் 720 கிலோ மீன், தங்க மோதிரம்..! எல்.முருகன் அதிரடி

 

Follow Us:
Download App:
  • android
  • ios