Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவின் ஜிடிபிக்கு 10,000 கோடி பங்களித்த யூடியூபர்கள்.. லட்சக்கணக்கில் உருவான வேலைவாய்ப்புகள் !!

யூடியூப் கன்டென்ட் கிரியேட்டர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ 10,000 கோடி பங்களித்து உள்ளார்கள் என்று  ஆக்ஸ்ஃபோர்டு எகனாமிக்ஸ் ஆய்வு தெரிவித்துள்ளது.

YouTubers contributed over Rs 10000 cr to India GDP in 2021
Author
First Published Dec 20, 2022, 8:18 PM IST

உலகின் மிகப்பெரிய வீடியோ தளமான யூடியூப்பில் தினமும் லட்சக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யபட்டு வருகிறது. நாளுக்கு நாள் யூட்யூப் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தவாறு இருக்கிறது. 

யூடியூப் கன்டென்ட் கிரியேட்டர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ 10,000 கோடி பங்களித்து உள்ளார்கள் என்று  ஆக்ஸ்ஃபோர்டு எகனாமிக்ஸ் ஆய்வு தெரிவித்துள்ளது. அதே காலகட்டத்தில் நாட்டில் 750,000 க்கும் மேற்பட்ட முழுநேர வேலைகளையும் அது உருவாக்கியது என்றும் கூறியுள்ளது.

2020 ஆம் ஆண்டில், கூகுளுக்குச் சொந்தமான இயங்குதளத்தில் உள்ள படைப்பாளிகள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ. 6,800 கோடி பங்களித்துள்ளது. மேலும், அது 683,900 வேலைகளுக்கு இணையான வேலைகளை உருவாகியுள்ளது. இதில் தமிழ்நாடு 3 ஆம் இடத்தை பெற்றுள்ளது.

YouTubers contributed over Rs 10000 cr to India GDP in 2021

இதையும் படிங்க..செலவே இல்லாமல் சுற்றுலா செல்ல வேண்டுமா.? நீங்க வந்தா மட்டும் போதும்! - இந்த நாடு பற்றி தெரியுமா உங்களுக்கு?

கூகுள் ஃபார் இந்தியா நிகழ்வில் திங்களன்று வெளியான அறிக்கையில், அனைத்து விதமான துறைகளை சேர்ந்த 5,633 யூடியூப் படைப்பாளிகள், 4,021 பயனர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 523 வணிகங்களை ஆய்வு செய்தது.இதுகுறித்து பேசிய யூடியூப் இயக்குனர் அஜய் வித்யாசாகர், இந்தியாவில் யூடியூப் நம் வாழ்வின் துணியில் பின்னப்பட்டிருக்கிறது.

யூடியூப்பின் ஆக்கப்பூர்வமான சுற்றுச்சூழல் அமைப்பு, இந்தியாவின் கிரியேட்டர் பொருளாதாரத்தை தொடர்ந்து மேம்படுத்துகிறது. நாடு முழுவதும் புதிய வேலைகள் மற்றும் வாய்ப்புகளை உருவாக்குவதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’ என்று கூறினார். மேலும் கற்றலை மேம்படுத்துவதற்காக யூட்யூபி தனது புதிய சலுகையை அறிமுகப்படுத்தியது.

பாடங்கள்' பார்வையாளர்களுக்கு தலைப்புகளுக்கான பல அமர்வு வீடியோ பயிற்சிகளை வழங்குவதற்கும், வீடியோக்களுடன் பிடிஎப் கோப்புகள் போன்ற துணைக் கற்றல் கருவிகளைச் சேர்ப்பதற்கும் படைப்பாளிகளை அனுமதிக்கும் என்றும் கூறினர்.  முக்கியமான சுகாதாரத் தகவலை உண்மையாக அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறோம்.

இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை உள்ளடக்கிய நம்பகமான தகவல்களை உருவாக்க, நாராயணா, மணிப்பால், மேதாந்தா மற்றும் ஷால்பி உள்ளிட்ட பல சுகாதார நிறுவனங்களுடன் இணைந்து செயல்படப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க..ஸ்டாலின் சொத்து பட்டியல் ரெடி! 13 அமைச்சர்களின் சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி.. பீதியை கிளப்பும் அண்ணாமலை!

Follow Us:
Download App:
  • android
  • ios