ஷாக்கிங் நியூஸ்: விரைவில் பெட்ரோல் விலை ரூ.2.50 உயர்வு..!
மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று காலை முதல் மதியம் வரை பொது பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்று உள்ளது.
விரைவில் பெட்ரோல் விலை ரூ.2.50 உயர்வு..!
மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று காலை முதல் மதியம் வரை பொது பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்று உள்ளது.
குறிப்பாக பெட்ரோல், டீசல் மீது ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் கூடுதல் வரி விதிப்பு நடைமுறைக்கு கொண்டுவரப்பட அறிவிப்பு வாசிக்கப்பட்டது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு தலா 2 உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, பெட்ரோல் டீசல் லிட்டருக்கு ரூ.1 கூடுதல் வரி மற்றும் கூடுதல் சுங்கவரி உட் கட்டமைப்புக்காக ரூ.1 விதிக்கப்பட்டுள்ளது. ஆக ரூ. 2 மத்திய வரியுடன் மாநில வாட் வரி சேரும்போது லிட்டருக்கு ரூ. 2.50 ரூபாய் விலை ஏற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது
மேலும் மத்திய பட்ஜெட் வெளியான புதிய வரிவிதிப்பு எதிரொலியால் இன்று பங்குசந்தை வீழ்ச்சி கண்டது. தங்கம் விலையும் சவரனுக்கு ரூ.560 உயரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தவிர பட்ஜெட்டில் பல முக்கிய திட்டங்கள் இடம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது