ஒடிசா அரசு மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 80% மாற்றுத்திறனாளிகள் மாதம் ரூ.3,500 பெறுவார்கள். இந்த உயர்வு சமூகத்தின் தேவைப்படும் பகுதிகளுக்கு உதவும்.

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இனிப்பான செய்தி

ஒடிசா அரசு மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இனிப்பான செய்தியை வழங்கியுள்ளது.ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஒரிசா அரசு, வயது மூத்தோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு எல்லா இடங்களிலும் முன்னுரிமை வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது.

ஓவ்வூதிய உயர்வு - பயனாளர்கள் மகிழ்ச்சி

ஒடிசா அரசு மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வரும் ஓய்வூதியத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனால் தாத்தா பாட்டிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒடிசா அரசின் இந்த அறிவிப்பின்படி, 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 80 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனுடன் வாழும் நபர்கள் புதிய ஓய்வூதிய தொகையை பெறுவர். புதிய அறிவிப்பின் படி மூத்த குடிமக்களும் மாற்றுத்திறனாளிகளும் மாதம் 3 ஆயிரத்து 500 ரூபாய் ஓய்வூதியமாக பெறுவார்கள்.

முக்கிய அம்சங்கள்

புதிய ஓய்வூதியத் தொகை: ரூ.3,500 மாதம்

தகுதி வாய்ந்தோர்

80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்

80 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனுடன் வாழும் நபர்கள்

உத்தரவை சரியாக அமல்படுத்த உத்தரவு

சமூக பாதுகாப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி நியதி பட்நாயக், மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர்களுக்கு உத்தரவு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில், தகுதி வாய்ந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் விவரப்பட்டியல் அட்டவணை–ஏ (Appendix-A) வடிவில் தயார் செய்து துறைக்கு விரைவாக அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை சரியாக அமல்படுத்த அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓய்வூதியம் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மரியாதையுடன் வாழ உதவும் என்று அரசு நம்புகிறது. இந்த ஓய்வூதிய உயர்வின் நேரடி நன்மை சமுதாயத்தின் மிகவும் தேவைப்படுகிற பகுதிக்கு சென்றடையும். இது அரசு மக்கள் நலத்திற்காக கொண்டுள்ள அர்ப்பணத்தை பிரதிபலிக்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.. இந்த அறிவிப்பை சமூக சேவையாளர்கள், பொதுநல அமைப்புகள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். இது மாநிலத்தின் சமூக பாதுகாப்பு அமைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான பரிணாமமாகக் கருதப்படுகிறது.