மஹசூஸ் லைவ் டிராவில் 100,000 AED வென்ற சென்னையை சேர்ந்த சுப்ரமணியன் சங்கரநாராயணன் ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். 

மஹசூஸ் லைவ் டிராவில் இந்தியர்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுவருகின்றனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் பெரும் தொகையை ஜெயித்துவருகின்றனர். மஹசூஸ் டிராவில் www.mahzooz.ae என்ற இணையதளத்தில் AED 35 செலுத்தி பதிவு செய்து போட்டியாளர்கள் விளையாடினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த வாரம் சனிக்கிழமை நடந்த மஹசூஸ் லைவ் டிராவில் கேரளாவை பூர்வீகமாக கொண்ட சென்னையில் வளர்ந்து ஷார்ஜாவில் பணிபுரிந்துவரும் சுப்ரமணியன் சங்கரநாராயணன் என்பவர் AED 100,000 வென்றார். 

கடந்த 20 ஆண்டுகளாக ஷார்ஜாவில் ஹெல்த்கேர் இண்டஸ்ட்ரியில் பணிபுரிந்துவருகிறார் சுப்ரமணியன். இவர் தொழில்முறை வயலின் டிரெய்னராகவும் உள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகளும் உள்ளார். தொடர்ச்சியாக மஹசூஸ் லைவ் டிராவில் விளையாடிவரும் சுப்ரமணியன் கடந்த வாரம் AED 100,000 வென்றுள்ளார்.

மஹசூஸ் லைவ் டிராவில் வெற்றி பெற்றது குறித்து ஏசியாநெட் நியூஸ் தமிழிடம் பேசிய சுப்ரமணியன், நான் வெற்றி பெற்றதாக எனக்கு இமெயிலில் தெரிவிக்கப்பட்டது. எனது வங்கிக்கணக்கை திறந்து பார்த்ததும் பெரும் தொகை வரவு வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். நான் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது. இந்த பணத்தை தங்கத்தில் முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். மேலும் சவுண்ட் எஞ்சினியரிங் படிக்க விரும்பும் எனது மகளின் படிப்பு செலவுக்காக இந்த தொகையை பயன்படுத்த உள்ளேன். மஹசூஸ் லைவ் டிராவில் விளையாடுவது மிக எளிது. பணமும் உடனடியாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மஹசூஸில் நம்பிக்கையுடன் தொடர்ந்து விளையாடுங்கள்; கண்டிப்பாக ஜெயிக்கலாம் என சுப்ரமணியன் தெரிவித்தார்.