பிரபல மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பல கோடி முறைகேடு – கொந்தளிக்கும் ஆசிரியர்கள்..!!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சென்னையில் உள்ள மெட்ராஸ் பல்கலைக்கழகம் மிகவும் பிரபலம். நம் அனைவருக்கும் தெரியும்.பல்லாயிர கணக்கான மாணவர்கள் பயிலும் இந்த பலகலைக்கழகத்தில் , கடந்த 3 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் அளவில் முறை கேடுகள் நடந்துள்ளது என கூறி , ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த 40 க்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது....!

இந்த முறைக்கேடு குறித்து, ஆசிரியர் சங்க தலைவர் ரவீந்திரன் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பென்சன் தொகையிலும், கல்வி உதவி தொகை வழங்குவதிலும் முறைகேடு நடந்துள்ளது என்றும், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், கல்லூரியின் துணை தலைவர் இடம் வெகு நாட்களாக காலியாக உள்ளதால், அந்த இடத்தை விரைவில் நிரப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.